நாயகன் படத்தைப் பற்றிச் சொன்ன மணிரத்னம்.. என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க

கடந்த 1987 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் நாயகன். இப்படம் வெளியான போது பலரும் இப்படத்தினைப் பற்றி வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளினர். அந்த அளவிற்கு கமலஹாசன் நடிப்பும் படத்தின் கதையும் ரசிகர்களை சுண்டி இழுத்திருந்தது.

இன்று திரைத்துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் திரைத்துறைக்கு வருவதற்கு காரணமாக இருந்தது நாயகன் திரைப்படம் தான். இதனை பல இயக்குனர்கள் பல மேடைகளில் கூறியுள்ளனர். ஏனென்றால் அந்தப் படம் தான் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் வெற்றிமாறன் போன்ற பல இயக்குனர்கள் நாயகன் படம் தான் நாங்கள் சினிமாவில் இருக்க காரணம் என கூறுகின்றனர். அந்த அளவிற்கு நாயகன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

அப்படிப்பட்ட நாயகன் படத்தை இன்று வரை பலரும் கொண்டாடி வருகின்றனர். சமீபத்திய பேட்டியில் மணிரத்னத்திடம் நாயகன் படத்தை பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் யாரும் எதிர்பாராத பதிலைக் கூறி திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

‘நாயகன் படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அந்த அளவிற்கு சிறப்பாக தங்களது உழைப்பை போட்டு வெளிப்படுத்தி உள்ளோம். ஆனால் இப்போது பார்த்தால் கூட எனக்கு படத்தில் ஒரு சில காட்சிகள் இப்படி எடுத்திருந்தால், இன்னும் அந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என்ற எண்ணம்தான் இருக்கிறது’ என மணிரத்னம் அந்த பேட்டியில் நாயகன் படத்தை குறித்து கூறியுள்ளார்.

மேலும் படத்தின் ஒருசில தவறுகள் தற்போதுவரை தனக்கு தென்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் மணிரத்னம் இந்த படத்திற்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு படத்தை பிரமாண்டமாக கொடுத்திருக்கலாமே எனவும் மணிரத்னம் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்