ஹோட்டலில் வித்தை காட்டும் கதிர்.. ஒரு ஆர்டரை வைத்து ஓராயிரம் பிளான் போட்ட பாண்டியன் மெஸ்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது ஐஸ்வர்யா புதிதாக பியூட்டி பார்லர் திறந்துள்ளார். இந்த திறப்பு விழாவுக்கு வந்த எல்லோருக்கும் மேக்கப் போட்டுவிட்டு ஒரு வழியாக வசூல் செய்துள்ளார்.

இவ்வாறு சாமர்த்தியமாக ஐஸ்வர்யா தனது கடையை நடத்தி வருகிறார். ஆனால் மறுபுறம் கதிரின் பாண்டியன் மெஸ் இன்னும் சில நாட்களில் ஊற்றி மூட வேண்டிய நிலைமைக்கு வரவுள்ளது. அதாவது கடைக்கு ஒரு நாளைக்கு பத்து பேர் தான் வருகிறார்கள். அதிலும் இரண்டு, மூன்று பேர் கடன் சொல்கிறார்கள்.

Also Read : பாக்யாவின் பெட்ரூமிற்குள் வந்த எக்ஸ் புருஷன்.. பீறிக்கிட்டு வந்த ஆசை!

கடையில் லாபம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை தினமும் நஷ்டம் தான். இதில் நாளுக்கு நாள் நஷ்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என கதிர் பெருமை பட்டுக்கொள்கிறார். எப்படியாவது கடையை லாபத்திற்கு ஓட்ட வேண்டும் என முல்லை ஏதேதோ யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஒருபுறம் தனம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வரும் நபர்களிடம் விசேஷத்திற்கு கதிரிடம் சாப்பாடு ஆர்டர் பண்ணுங்கள் என சிபாரிசு செய்து வருகிறார். கதிர் தற்போது ஹோட்டலில் கரண்டியை ஸ்டைலாக பிடிப்பது, டியை அசால்டாக ஆத்துவது என வித்தை காட்டிக்கொண்டே இருக்கிறார்.

Also Read : கல்யாணம் என்ற பெயரில் மதக்கலவரத்தை உண்டாக்கிய சிவகாமி.. அதிர்ச்சியில் மொத்த குடும்பம்

முல்லையும் கதிர் செய்வதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கதிர் புரோட்டா போடும்போது அதை முல்லை பிடிக்கிறார். அதில் சில புரோட்டாக்கள் கீழே விழுந்தவுடன் இது என்ன விளையாடுற இடமா என முல்லையின் அம்மா கோபமாக பேசுகிறார்.

இந்நிலையில் ஹோட்டலுக்கு சாப்பிட வரும் ஒரு நபர் கதிர் ஸ்டைலாக புரோட்டா போடுவதை வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் வெளியானவுடன் டிரெண்டாகி கதிரின் ஹோட்டலுக்கு அதிக கூட்டம் வர வாய்ப்புள்ளது. எப்படியோ கதிரின் சாப்பாட்டுக்காக ஹோட்டலுக்கு வரவில்லை என்றாலும் இந்த வீடியோவுக்காக கண்டிப்பாக வருவார்கள்.

Also Read : புளியங்கொம்பை பிடித்த சீரியல் நடிகை மகாலட்சுமி.. முதல் கணவரை பிரிய இதுதான் காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்