19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கும் பிரபல இயக்குனர்.. இவர் இயக்கிய 2 படமும் செம்ம ஹிட்டாச்சே!

சினிமா துறையில் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்திருக்கும். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தலைமுறைகள் தாண்டியும் கூட ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே பேசப்பட்டு வரும்.

அதனடிப்படையில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த நம் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்தது “இதயம் “திரைப்படம். திரைப்படத்திற்குப் பின்பு முரளி இதயம் முரளி என்று அழைக்கப்பட்ட அந்த அளவிற்கு திரைப்படம் வரவேற்பு பெற்றது.

இதயம் திரைப்பட இயக்குனர் கதிர் அவர்கள் 19 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரு காதல் சகாப்தம் படைக்க வருகிறார் .காதல் தேசம் ,காதலர் தினம் போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் கதிர்.

kathir
kathir

அவர் கடைசியாக இயக்கிய காதல் வைரஸ் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் பின் வேறு படங்களில் அவர் நாட்டம் காட்டவில்லை .தற்போது மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் சினிமா துறையில் பல வெற்றிகளை குவித்தவர். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு புதுமுக நாயகனாக கிஷோர் என்பவரை வைத்து திரைப்படம் எடுக்க உள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

இத்திரைப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது .மேலும் இப்படத்திற்கு நடிகர்கள் ,நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்