போனவாட்டி சரிக்கிடுச்சு இந்தவாட்டி சக்சஸ் பண்றேன்.. மீண்டும் பட வாய்ப்பு வாங்கிய விக்ரம்

உலக நாயகன் கமல்ஹாசன் படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் கவனம் செலுத்த உள்ளார். இதில் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்திற்கு கமல்ஹாசன் கதை எழுதுவதோடு, அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் அவரே தயாரிக்க உள்ளார்.

கமல் கதை எழுதி, மகேஷ் இயக்க உள்ள இந்த புதிய படத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம். இந்த படத்தில் கமலுக்கு சிறு கதாபாத்திரம் தானாம். விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியை சுற்றி தான் முழு கதையும் நகர்கிறதாம்.

ஆனால் படத்தில் வில்லன் விக்ரமா அல்லது விஜய் சேதுபதியா என்பது தெரியவில்லை. மேலும் படம் குறித்த மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் கமல், விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவருமே தற்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் அவற்றை முடித்த பின்னர் இப்படம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கமல் மற்றும் விக்ரம் ஆகிய இருவருமே நடிப்பு அரக்கர்கள் எனும் அளவிற்கு அவர்களின் அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சிறந்த நடிகர்கள்.மேலும் விஜய் சேதுபதியும் இதில் குறைந்தவர் கிடையாது. அவரது நடிப்பும் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் மூவரின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு உருவாக தொடங்கி விட்டது.

கடைசியாக கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் மீண்டும் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து இந்த படத்தில் வெற்றி பெறுவார்கள் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்