பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவியின் 32 வது படம்.. தெலுங்கு நடிகைக்கு வலை வீசிய படக்குழு

ஜெயம் ரவி தனது அண்ணனின் உதவியால் சினிமாவிற்குள் நுழைந்தாலும் இவரது விடாமுயற்சியால் இப்பொழுது வரை வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கிறார். அத்துடன் ஒரு சில படங்கள் டல்லாக அமைந்தாலும் அடுத்த ஒரு படத்தில் கமிட் ஆகி அதை வெற்றி படமாக கொடுக்கும் ஒரு லக் இவரிடம் இருக்கிறது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் கடந்த வருடம் பொன்னின் செல்வன் என்ற பிரம்மாண்டப் படத்தில் அருள் மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து எல்லார் மனதிலும் நச்சுனு ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதைத் தொடர்ந்து அகிலன் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த மாதம் கடைசியில் வெளிவர இருக்கிறது. இந்த படம் இவரை கண்டிப்பாக தூக்கி விடும்.

Also read: பொன்னியின் செல்வன் போஸ்டரில் ஏற்பட்ட குழப்பம்.. அவமானத்தை நாசுக்காக திருத்திய ஜெயம்ரவி

இதை வைத்து அடுத்தடுத்த சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதில் இறைவன் படம் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக இவருடைய முப்பதாவது படத்திற்கு தற்காலிகமாக JR30 என்று வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை எடுத்த எம் ராஜேஷ் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஜெயம் ரவி இப்பொழுது பொன்னின் செல்வன் படத்தில் பிசியாக இருப்பதால் அந்த படம் வெளியான பிறகு இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் அனைத்தும் வெளிவரும்.

Also read: ஃப்ளாப் இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் ஜெயம்ரவி.. அட்டகாசம் செய்யப்போகும் கேங்ஸ்டர்

அடுத்ததாக ஜெயம் ரவி சைரன் படத்தில் கமிட் ஆகிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் .இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்குகிறார். மேலும் இப்படம் இந்த வருட இறுதியில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இவரின் 32 வது படமான படத்துக்கு சமீபத்தில் பெயர் வைக்கப்பட்டு உறுதி செய்திருக்கிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இவர் நடிக்கும் புது படத்திற்கு ஜெனி என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறது. அத்துடன் இப்படத்தை இயக்குவது புது இயக்குனராக அறிமுகமாகும் புவனேஷ் அர்ஜுனன். மேலும் இப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்கு தெலுங்கு நடிகையான கீர்த்தி செட்டி அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஜெயம் ரவியின் கேரியருக்கு மிகப்பெரிய படமாக அமையும்.

Also read: பாலிவுட்டில் ஜெயம் ரவி.. அஜித் பட தயாரிப்பாளரின் பக்கா பிளான்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்