சீரியல் நடிகைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் ஈஸ்வர்.. மகாலட்சுமி முதல் திவ்யா வரை

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகள் வாய்ப்புக்காக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் இவர்களுக்கு அதிகமாக அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் இருந்து வருவதால் பல சீரியல் நடிகைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் எல்லா தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வர்  மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போனார்.

Also Read :5 வருட லிவிங் டுகெதர், மதமாற்றம்.. புது நடிகையின் மோகத்தால் புளித்துப்போன கர்ப்பிணி மனைவி

அதாவது சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் ஈஸ்வர் நெருக்கமாக இருப்பதாக புகார் அளித்திருந்தார். மகாலட்சுமி ஏற்கனவே கணவனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ ஊடகங்களில் பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். தற்போது மீண்டும் ஒரு சீரியல் நடிகையின் பிரச்சனை இணையத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது விஜய் டிவியின் செல்லம்மா தொடர் கதாநாயகன் அர்னவ், கேளடி கண்மணி தொடரின் நாயகி திவ்யா இருவரும் காதலித்த திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Also Read :புருஷனை இறுக்கிப் பிடித்த மனைவி.. கொடூரமான வில்லியாக மாறிய ராதிகா

தற்போது திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் அர்ன்வ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் அர்னவ் தரப்பில் இருந்து எங்களுக்குள் நடக்கும் சாதாரண சண்டை பெரிதாக்குவது ஈஸ்வர் தான் என குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஈஸ்வர் உடன் சேர்ந்து தான் திவ்யா இந்த வேலைகளை செய்து வருவதாக அர்னவ் கூறியுள்ளார். தொடர்ந்து சின்னத்திரை நடிகைகளின் பிரச்சனைகளில் ஈஸ்வரின் பெயர் அடிபட்டு வருகிறது. இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.

Also Read :வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா.. மாட்டிக்கொண்டு முழிக்கும் ரெண்டு பொண்டாட்டி காரன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்