ராஜுவின் மனதை ஆழமாகப் பாதித்த சம்பவம்.. பிக்பாஸில் பொறுமையாக இருந்ததற்கு இதுதான் காரணம்

நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வின்னரான ராஜுவிற்கு அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு பொறுமையாக இருந்ததற்கு காரணம் என்ன என்று ராஜுவிடம் கேள்விமேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு அவருடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த சோகங்களால், அவரது மனம் பக்குவப்பட்டு விட்டதாம். இதனால்தான் அவர் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு செயல் நிகழ்ந்தாலும் அதற்கு அதிக அளவில் உணர்ச்சிகளை காட்டாமல் பொறுமையாக கண் கையாண்டுள்ளார்.

சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த போது, ராஜுவிற்கு பக்கபலமாக இருந்த ஒரே நபர் அவருடைய தந்தையாம். அவருடைய அம்மா கூட ராஜு சினிமா துறையை தேர்ந்தெடுத்ததற்கு வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் அலைந்து திரிந்து வாய்ப்பு கிடைக்காமல் அலைமோதிய ராஜு, இறுதியில் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் தன்னுடைய தந்தையை இழந்து பெரும் சோகத்தை எதிர்கொண்டுள்ளார். எனவே வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த அடிமேல் அடி, எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்ற பெருமையை மேலும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இதனால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ராஜு, அவருக்கு தோன்றிய உணர்ச்சியை மற்ற போட்டியாளர்கள் போல் காண்பிக்காமல் அளவுடன் காட்டியுள்ளாராம். இருப்பினும் ராஜு அழுததை மறந்து சில காலங்கள் இருந்து நிலையில், அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தேம்பித் தேம்பி அழுதார்.

இவ்வாறு பிக்பாஸ் வீடு அவருடைய உணர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டி இருப்பதாகவும், அவரை அறியாமல் பலமுறை பிக்பாஸ் வீட்டில் அழுதிருக்கிறாராம்.

எனவே ராஜுவின் மீது அவருடைய தந்தை வைத்திருக்கும் நம்பிக்கை, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்து, வாய்ப்புகள் அவரை வந்து குவியும் என்று சோசியல் மீடியாவை அவருடைய ரசிகர்கள் வாழ்த்தி கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்