ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கோடியில் சம்பளம் கேட்ட நடிகை

பொதுவாக முன்னணி நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பார்கள். ஆனால் இங்கே முன்னணி நடிகை ஒருவர் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதம் தெரிவித்துள்ளார். இச்செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிசியாக வலம் வருபவர் தான் அந்த முன்னணி நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் தொடர் ஒன்றில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டி நடித்ததால், குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. அதனை தொடர்ந்து கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் அந்த நடிகை கணவரை பிரிந்தார்.

தற்போது அனைத்து சொந்த பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை கதைகளை கவனமாக தேர்வு செய்வார் என எதிர்பார்த்தால் பிரபல தெலுங்கு நடிகரின் படம் ஒன்றில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஓகே சொல்லி உள்ளார். அதிலும் மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளாராம்.

அந்த பாடல் காட்சியில் கவர்ச்சி சற்று தூக்கலாக இருப்பதால், தான் படத்தில் நாயகிக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும் என படக்குழுவினரிடம் நடிகை டிமாண்ட் வைத்துள்ளார்.

முதலில் இதை கேட்டு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தாலும், நடிகைக்கு தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்ட சம்பளத்தை வழங்க ஒப்பு கொண்டார்களாம்.

அதன்படி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட அந்த நடிகைக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஹீரோயினுக்கு இணையாக சம்பளம் வாங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என சிலர் கூறி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்