பப்ஜி விளையாடுவதன் மூலம் ஆபாசமாக பேசி மதன் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகைகள் மற்றும் பிரபலங்களுக்கு டாட்டூ குத்தும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் மற்றுமொரு மன்மதன்.
டாட்டூ குத்துவது என்பது அவர்கள் சுதந்திரம் தான், அதை நாம் மறுக்க முடியாது. ஆனால் அதை இரட்டை அர்த்தத்தில் பேசி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் அல்லது யூடியூப் சேனலில் வெளியிடுவது சட்டப்படி குற்றம்.
இதனால் வளர்ந்து வரும் இளைய சமுதாயம் சீரழியும். தனக்கென்று ஒரு யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு தன்னிடம் வரும் பிரபலங்கள் மற்றும் நடிகைகளுக்கு டாட்டூ குத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. டாட்டூ குத்தும்போது இரட்டை அர்த்தத்தில் பேசுவது (வலிக்காம போடுவதில்ல நாங்க ஃபேமஸ்) , கேவலமாக கமெண்ட் பதிவிடுவது என்று சில தவறான செய்திகளை செய்து வருகின்றனர்.
இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பிரபல செய்தி தொடர்பாளரான திவ்யா துரைசாமி இவரிடம் சென்று புதிய டாட்டூ குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி வசிப்பவர்களுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் இருக்கிறது, அப்படி ஒரு இடத்தில் இருந்து கொண்டு இதுபோன்ற ஆபாசமாக டாட்டூ குத்துவது மட்டுமில்லாமல் இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்டதுக்கு பதில் கூறுவது போன்று வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இவர் வெளியிடும் அனைத்து வீடியோக்களும் வாடிக்கையாளர்களின் சம்மதத்துடன் தான் வெளியீடு வாரம். இப்படி ஒரு கேவலமாக விளம்பரம் தேடிக்கொள்ளும் நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.