சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிரடி காட்டிய காவல்துறை!

மும்பையில் சுதந்திரவிழா, கணபதி விழா ஆகியவற்றை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில், தாதர், பைக்குல்லா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்கள் மற்றும் நடிகர் அமிதாப் பச்சனின் வீடு உள்ளிட்ட இடங்களில், வெடி குண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் தெரிவித்தார்.

இதையடுத்து, மும்பை காவல் துறை, ரயில்வே காவல் துறை, வெடி குண்டு நிபுணர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்திய போதுதான் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது.

பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தானே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து, மும்பை போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, “நடிகர் அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் மூன்று ரயில் நிலையங்களுக்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். பின்னர் இது பொய்யான வெடிகுண்டு மிரட்டல் என தெரிய வந்தது.

இது தொடர்பாக மும்பை காவல் துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு இருவரை கைது செய்துள்ளது. நேற்று இரவு காவல் துறைக்கு வந்த பொய்யான வெடி குண்டு மிரட்டல் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.

amitabh-bomb-threat
amitabh-bomb-threat

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பொய்யான மிரட்டலாக இருந்தாலும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சிலர் அமிதாப்பிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்