ஆழமான கருத்தை பதிவு செய்த ராஜு.. ப்ரோ நீங்க மொத்த ஓட்டையும் அள்ளிருவீங்க போல

விஜய் டிவியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர்ந்து வருகின்றனர். அதில் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது நடிகர் ராஜூ.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 என்ற சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கேரக்டரில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் அதை விட அதிகமான ரசிகர்களை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு பெற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டில் அவரின் துரு துரு இயல்பும், நகைச்சுவையும் மக்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. எந்த ஒரு விஷயத்தையும் அலட்டாமல் செய்யும் இவர் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக மாறியுள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராஜு மிகவும் அற்புதமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் எங்க வீட்டில் உள்ள அனைவரிடமும் தினமும் பேச வேண்டும் என்பதுதான்.

தினமும் நான் என் அம்மாவிடம் போனில் பேசும்போது சாப்டியா என்பது போன்ற விஷயங்களை மட்டும் தான் கேட்பேன். மற்றபடி அவர்கள் மனதில் என்ன இருக்கிறது, என்ன ஆசைப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் முயற்சி செய்ததில்லை.

இனி நான் அந்த தவறை செய்யாமல் வீட்டில் உள்ள எல்லோரையும் நன்றாக கவனிக்க போகிறேன். இதை நான் பிக்பாஸில் இருந்து கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய காலத்தில் வீட்டில் உள்ள மூத்த தலைமுறையைச் கவனிக்க வேண்டும் என்று பேசிய ராஜுவுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரசிகர்களின் பலத்த ஆதரவை கொண்டிருக்கும் ராஜு, இப்படி ஒரு சிறப்பான கருத்தை கூறி அவர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்