விமான நிலையத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. ரவுண்டு கட்டி சம்பவம் செய்த போலீஸ்

சமீபகாலமாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் போதை மருந்து, தங்க கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்குவது அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு பிரபலம் தங்க கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளி உடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அக்ஷரா ரெட்டி. கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஏற்கனவே விஜய் டிவியின் வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தங்க கடத்தல் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தியதாக இரண்டு பர்தா அணிந்த பெண்கள் பிடிபட்டனர்.

இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக பையஸ் மற்றும் இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுடன் நடத்திய விசாரணையில் பையசுக்கு தமிழ் திரையுலக பிரமுகர்கள் உடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தங்க கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை அவர் சினிமாத்துறையில் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. அந்த விசாரணையில் நடிகை அக்ஷராவுக்கு தொடர்பு இருப்பதாக கருதி அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்காக அவர் நேற்று கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தங்கக் கடத்தல் மற்றும் பையசுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையின் முடிவில் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் விசாரணையில் அக்ஷரா என்ன பதில் அளித்தார் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த செய்தியால் அக்ஷராவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்