வீடு திரும்பிய பாக்யா.. சம்பவத்திற்கு தயாரான கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவுடன் தொடர்பில் இருந்த விஷயத்தை அறிந்த பாக்யா அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பிறகு பாக்கியலட்சுமி குடும்பமே நிலைகுலைந்து போனதால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டுக்கு வர வைக்க வேண்டுமென கோபி, பாக்யாவை சந்தித்து பேசினார்.

அப்போது பாக்யா கோபியிடம் இனி இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என உத்தரவாதம் கொடுங்கள் என்று கேட்டதற்கு கோபியும் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அந்த சமயத்தில் கூட மனம் முழுவதும் ராதிகாவை நினைத்துக் கொண்டிருந்ததால் ‘நீ தான் என்னுடைய வாழ்க்கை ராதிகா’ என ராதிகாவின் பெயரை தவறுதலாக உச்சரித்து மேலும் பாக்யாவின் ஆத்திரத்தைக் கிளப்பினார்.

அதன்பிறகு பாக்யா கோபியை ‘வீட்டை விட்டு வெளியேறு’ என அசிங்கப்படுத்தி அனுப்பினார். பாக்யா இல்லாமல் குடும்பமே வருத்தத்தில் இருப்பதால் அவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல் கோபி முழித்துக் கொண்டிருந்தார்.

பிறகு பாக்யா மறுநாள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு குடும்பத்தினரை ஒருமுறை சென்று பார்க்கலாம் என வீட்டிற்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் குடும்பமே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும்போது கோபி மட்டும் ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என பெருமூச்சு விட்டு தன்னுடைய ஆட்டத்தை துவங்க ஆயத்தம் ஆகிறார்.

ஆனால் பாக்யா தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு போவதற்காக வந்திருக்கிறார். கூடவே தன்னுடைய மகள் இனியாவையும் அழைத்து செல்ல நினைக்கிறார். துரோகம் செய்தவருடன் சேர்ந்து வாழக்கூடாது என்பது மட்டும் பாக்யா தெளிவாக இருக்கிறார்.

இவ்வளவு நடந்தும் திருந்தாத கோபி, தனது உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி பாக்யாவிடம் விவாகரத்து பெற்று ராதிகாவை திருமணம் செய்து கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் போகிறார். இனிமேல்தான் இந்த சீரியல் சூடுபிடிக்க போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்