பாலா கதையை கேட்டு மிரண்டு போன முன்னணி நடிகர்.. ஓகே சொல்லி அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம்

பாலா இயக்கத்தில் நாச்சியார் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த வசூல் இல்லை. அதனைத் தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுத்த வர்மா படமும் சுத்தமாக எடுபடவில்லை.

இதனால் ஒரு வெற்றிப்படம் கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பாலா. இதனால் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் கதையை ரெடி செய்து அதற்கான தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களை தேடி வந்துள்ளார்.

அந்த வகையில் பாலாவின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தை சூர்யா தயாரிக்க இருப்பதாகவும் கூறினர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக முழுக்கதையையும் கேட்ட சூர்யா, நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என ஓகே சொல்லி அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஹீரோ படம் என்பதால் அதில் ஒரு ஹீரோவாக நானே நடிக்கிறேன் என சூர்யா சொன்னதாகவும் மற்றொரு ஹீரோவாக அதர்வா நடிக்க இருப்பதாகவும் மேலும் இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். வாடிவாசல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இடையில் பாலா படத்திலும் நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

bala-suriya-cinemapettai
bala-suriya-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்