விபத்தில் சிக்கிய ராதிகா.. சத்தியத்தை மீறி சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரில் கோபிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவருடைய கல்லூரி காதலியை எதார்த்தமாக சந்தித்து தற்போது அவருடன் பழகி வருகிறார்.

இந்த விஷயம் கோபி, அவருடைய குடும்பத்திற்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் இது கோபியின் தந்தை ராமமூர்த்திக்கு தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி கோபியை பலமுறை எச்சரித்துள்ளார். கோபியின் காதலி ராதிகா, பாக்கியலட்சுமியின் நெருங்கிய தோழி. பாக்யாவின் கணவர்தான் கோபி என்பது ராதிகாவிற்கு தெரியாது.

இதனால் ராமமூர்த்தி, கோபியிடம் இனிமேல் ராதிகாவுடன் பழகினால் ராதிகாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி விடுவேன், இனிமேல் ராதிகாவை பேசவோ, பார்க்கவோ கூடாது என சத்தியம் வாங்குகிறார். சத்தியத்தை மீறியும் கோபி, ராதிகா வீட்டிற்கு சென்று கதவை திறக்க முயற்சி செய்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா தயவு செய்து இனி இந்த வீட்டுக்கு வராதீங்க என சொன்னது அவருக்கு ஞாபகம் வருகிறது. அதனால் கோபி கதவைத் திறக்காமல் வெளியே போகிறார். இந்நிலையில் ராதிகாவை பார்க்க முடியாமல் கோபி வருத்தத்தில் இருக்கிறார். இதனால் கோபி முகபாவனை பார்த்து பாக்கியா ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என கேட்கிறார். உடனே கோபி, பாக்யாவை திட்டுகிறார்.

கோபி ராதிகாவை எப்படி சந்திப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராதிகாவுக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. ராதிகாவின் மகள் மயூ பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கோபிக்கு போன் செய்கிறார்.

உடனே கோபி புறப்பட்ட அந்த இடத்திற்கு செல்கிறார். இந்த சமயத்தை பயன்படுத்தி கோபி மீண்டும் ராதிகாவுடன் பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு தெரிந்தால் அதிரடியான முடிவு எடுப்பார். இதனால் இனி பாக்கியலட்சுமி தொடரில் சுவாரஸ்யமான கதைக் களத்துடன் நகரும் என எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்