கேலி, கிண்டல்களுக்கு நடுவில் சாதித்துக் காட்டிய அட்லீ.. இனி ஆட்டத்தை கவனிங்க!

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக மாறியவர் அட்லீ.

இதுவரை அட்லீ எடுத்த நான்கு படங்களுமே ஏற்கனவே இந்திய சினிமாவில் வெளிவந்த பல படங்களின் காப்பி என பலமுறை அவரது மனது நோகும்படி நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை தாக்கி பேசி வருகின்றனர்.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்த காயை நகர்த்தி வந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே ஷாருக்கான் படத்தில் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சுமார் மிகப்பெரிய பொருட்செலவில் மாஸ் படமாக உருவாக உள்ளது அந்த திரைப்படம்.

சில வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட வேண்டிய அந்த படம் கொரானா பிரச்சனைகளில் சிக்கி தடுமாறிய நிலையில் தற்போது ஒரு வழியாக அந்த படத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது. வருகின்ற செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்கப்படவுள்ளது.

இந்த படம் தொடங்குவதற்குள் அட்லி சாருக்கான் படம் அவ்வளவுதான் எனவும், ஷாருக்கான் அட்லீயை துரத்தி விட்டதாகவும் ஏகப்பட்ட கேலி கிண்டல் பதிவுகள் அட்லீயின் மீது தொடர்ந்தது மறுக்க முடியாத ஒன்று. தற்போது அதையெல்லாம் ஓரம் கட்டி சாதித்துக் காட்டிவிட்டார் அட்லீ.

அட்லீ ஷாருக்கான் படம் மட்டும் சூப்பர் ஹிட்டாகி விட்டால் இந்திய அளவில் மிகப் பெரிய இயக்குனராக அட்லீ உருவெடுத்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

atlee-sharukhan-cinemapettai
atlee-sharukhan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்