ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஏமாற்றிய அஸ்வின்.. இதுக்கு இந்த கதையை கேட்கும் போதே தூங்கியிருக்கலாம்

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இன்று ஒரு ஹீரோவாக உயர்ந்து இருப்பவர் அஸ்வின். இவரின் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட உடனே அவரது ரசிகர்கள் அதை மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் அஸ்வின் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய அஸ்வின் இந்த திரைப்படத்திற்கு முன் நான் நாற்பது கதைகளை கேட்டு தூங்கிவிட்டேன் என்று சர்ச்சையான ஒரு கருத்தை தெரிவித்தார்.

இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே அவருக்கு எதிராக கொந்தளித்தது. அதன் பிறகு இந்தப் பிரச்சனை ஒரு வழியாக முடிந்து தற்போது படம் ரிலீஸாகியுள்ளது. பல பிரச்சனைகளுக்கு இடையில் வெளியாகியுள்ள இந்த படத்தை அஸ்வின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் தியேட்டரில் பார்த்து வருகின்றனர்.

ஆனால் படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கதையை அஸ்வின் எப்படி தேர்வு செய்தார் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் கேட்கின்றனர். அந்த அளவுக்கு படம் ரொம்ப மொக்கையாக இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

40 கதைகளை கேட்டு தூங்கிய அஸ்வின் இந்த கதையை கேட்கும் பொழுதும் தூங்கி இருக்கலாம். ஒருவேளை இரண்டு ஹீரோயின் என்பதால் ஒப்புக் கொண்டார் போல. மேலும் படத்தில் அனைவரின் நடிப்பும் செயற்கையாகவே உள்ளது.

மேலும் காதல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ள அஸ்வினுக்கு சென்டிமென்ட் காட்சிகள் சுத்தமாக வரவில்லை. சிறு குழந்தை கூட யோசிக்கும் படியாக இருக்கும் இந்த கதையை அஸ்வின் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று தான் தெரியவில்லை. மொத்தத்தில் ஓவர் பில்டப் கொடுத்த என்ன சொல்ல போகிறாய் படம் அஸ்வின் ரசிகர்களை கவர தவறியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்