அர்ச்சனாவால் அல்லோலபடும் பார்வதி.. பித்தலாட்டத்தை கண்டுபிடிக்கும் ஐபிஎஸ் மூளை!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் வில்லி அர்ச்சனா செய்யும் கேடுகெட்ட வேலையினால், தற்போது பார்வதியின் வாழ்க்கை சின்னாபின்னமாக போகிறது. ஏனென்றால் பார்வதி, விக்கி என்ற பொறுக்கியை தவறுதலாக காதலித்து, அவனுடைய சுயரூபம் தெரிந்ததும் அவனைவிட்டு விலகினாள்.

இதை சாக்காக பயன்படுத்தும் அர்ச்சனா, பார்வதிக்கு வீட்டார் பார்த்து வைத்த பாஸ்கரை தன்னுடைய தங்கை பிரியாவிற்கு கல்யாணம் செய்து வைக்க திட்டமிட்டு அவர்களது வீட்டிற்கு சென்று இதைப்பற்றி பேசுகிறாள்.

அர்ச்சனா இப்படி செய்வதற்கு பாஸ்கரன் வசதியாக இருப்பதுதான் காரணம். அந்த வசதியான வாழ்க்கை தன்னுடைய தங்கைக்கு கிடைக்க வேண்டும் என்றும், பல இடங்களில் அர்ச்சனாவை அவமானப்படுத்திய பார்வதியை பழிவாங்க வேண்டும் என்று அர்ச்சனா இப்படிப்பட்ட வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அதுமட்டுமின்றி பாஸ்கர்-விக்கி இருவரையும் நண்பர்களாக பழக வைத்து, பார்வதிக்கு பாஸ்கர் முன்பே விக்கி குடைச்சல் கொடுக்கிறான். இதனால் பார்வதியும் தன்னுடைய திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை சந்தியா கண்டுபிடித்து விடுகிறாள்.

இதற்கெல்லாம் காரணம் அர்ச்சனா தான் என்பதை தன்னுடைய ஐபிஎஸ் மூளையால் சந்தியா கண்டுபிடித்து, அர்ச்சனாவிற்கு தக்க பாடம் புகட்ட போகிறாள். அதுமட்டுமின்றி பாஸ்கரின் அம்மா அர்ச்சனாவை, ‘உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கிறாயா’ என திட்டியும், மாமியாருக்கு தெரியாமல் பித்தலாட்டம் நடத்துகிறாயா என்றும் அர்ச்சனா மற்றும் அவளுடைய அப்பா அம்மாவையும் சேர்த்து திட்டி விரட்டி அனுப்புகின்றார்.

இவ்வாறு சமாதானம் பேசி பாஸ்கரை பிரியாவிற்கு திருமணம் செய்து வைக்க நினைத்த அர்ச்சனாவின் வேலை செல்லுபடி ஆகாத போது, அடுத்த கட்டமாக விக்கியை பயன்படுத்தி பாஸ்கரை நிரந்தரமாக பார்வதியிடம் இருந்து பிரிக்கும் வேலையை செய்யப்போகிறாள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்