அண்ணாத்த படத்தின் ஒரு வரி கதை இதுதான்.. இதைத்தான் ஒரு வருடமாக உருட்டிக் கொண்டிருக்கும் சிறுத்தை சிவா!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த(annaatthe). கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் 2021 தீபாவளிக்கு வெளியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தர்பார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன் காரணமாக தன்னுடைய படமான பேட்ட படத்துடன் மோதி மிகப்பெரிய வெற்றிபெற்ற விஸ்வாசம் படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவாவை அடுத்த படத்திற்கு இயக்குனராக தேர்வு செய்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் முதலில் கொரானா தொற்று ஏற்பட்டதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது முழு மூச்சாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டுமென ஹைதராபாத்தில் பலத்த கட்டுப்பாடுகளுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் மொத்த படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

இந்நிலையில்தான் அண்ணாத்த படத்தின் ஒரு வரிக்கதை என்ன என்பது இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பாரம்பரிய குடும்பத்துப் பெண் விருப்பப்பட்ட காதலனுடன் ஓடி விடுவதால் குடும்பத்திற்குள் ஏற்படும் பஞ்சாயத்தும், சிக்கல்களும் தான் அண்ணாத்த திரைப்படத்தின் கதை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முறைப்பெண்களாக நடிகை மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வரும் அண்ணாத்த படம் 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

annaatthe-cinemapettai
annaatthe-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்