மலை உச்சியில் ஆபத்தான புகைப்படம் எடுத்த அமலாபால்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் சங்கு தான்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலாபால்(amalapaul). சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.

என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.

மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

கொஞ்ச நாட்களாகவே படவாய்ப்புகள் பெரிதாக கைவசம் இல்லாத நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எப்படியேனும் ஒரு பெரிய நடிகரின் பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என தவித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் விடுமுறை தினங்களில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பொழுதைக் கழிக்கவும் அமலாபால் தவறுவதில்லை. அந்த வகையில் மலை உச்சியில் தன்னுடைய சகோதரர் மடியில் அமர்ந்து உயிரை பணையம் வைத்து அவர் எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

amalapaul-cinemapettai
amalapaul-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்