24 மணி நேரமும் போதை ஊசி போட்டுக்கொண்டே நடித்த பிரபல நடிகை.. அந்த அளவுக்கு அடிமையாம்!

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் என்னேரமும் குடித்துவிட்டுத்தான் படங்களில் நடிக்க வருவார்கள் என்ற செய்திகள் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு நடிகை 24 மணி நேரமும் போதை ஊசி பயன்படுத்தியது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

சினிமாவைப் பொருத்தவரை நடிகர் நடிகைகள் குடிக்கு அடிமையாவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அது எல்லாமே படப்பிடிப்பிற்கு பிறகு பார்ட்டி கொண்டாட்டங்களில் தான் அதிக அளவு இடம் பெறும்.

ஒரு குறிப்பிட்ட சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னேரமும் போதையில் இருந்து வந்த செய்தி கூட உண்டு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ரகுவரன், முரளி போன்றோர் பெரும்பாலும் படப்பிடிப்பின் போது போதையில் தான் இருப்பார்களாம்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் 24 மணி நேரமும் போதை ஊசி பயன்படுத்திய செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, நம்ம கவர்ச்சி கட்டழகி சில்க் ஸ்மிதா தான்.

silksmitha-cinemapettai-01
silksmitha-cinemapettai-01

வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மாபெரும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். இந்தியா முழுவதும் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா நீண்டகாலமாக ஒரு டாக்டரின் கைவசம் இருந்தாராம்.

அந்த டாக்டர் சில்க் சுமிதாவுக்கு தொடர்ந்து போதை ஊசி பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டாராம். இதனால் படப்பிடிப்பின் போது போதை ஊசியை பயன்படுத்திக் கொண்டு தான் ஒரு காட்சியில் நடிக்க வருவாராம் சில்க் ஸ்மிதா. அதுதவிர சில்க் ஸ்மிதாவுக்கு போதைப் பாக்கு போடும் பழக்கமும் இருந்துள்ளதாக பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்