தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா தத்தா. அதற்குப் பின்னர் பாயும் புலி, ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்களில் கிடைக்காத விளம்பரம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற படங்களில் நடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
கிட்டத்தட்ட 5 படங்களுக்கு மேல் நடித்து வெளிவராமல் இருப்பதால் சற்று பயதில் தான் உள்ளார் ஐஸ்வர்யா தாத்தா. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நானும் சினிமாவில் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்தி வருவார் ஐஸ்வர்யா.
தற்போது முன்பக்கம் முழுசாக தெரிவது போன்ற மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இது போன்ற நடிகைகள் புகைப்படங்களை வெளியிடுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் படங்களில் இந்த அளவிற்கு என்னால் கவர்ச்சி காண்பிக்க முடியும் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது மட்டுமே.