ஹீரோக்களை பிரித்து பட வாய்ப்பை தட்டிப் பறித்தனர்.. உச்சகட்ட ஆதங்கத்தில் வடிவேலு

சில வருடங்களாக படங்களில் காணாமல் போயிருந்த வடிவேலு தற்போது மீண்டும் பிரச்சினைகள் யாவும் நீங்கி உதயநிதியுடன் மாமன்னன், நாய் சேகர், சிவா கார்த்திகேயனுடன் ஒரு படம் என நடித்து வருகிறார். உச்சத்தில் இருந்த போது சில பிரச்சினைகளால் காணாமல் போயிருந்த இவர், மீண்டும் தங்களை பழைய படி சிரிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

சர்ச்சைகள் நீங்கி பின், தற்போது அவர் சில மாதங்களுக்கு முன் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்ததில் தமிழ் சினிமா பிரபலங்கள் சிலரை தாக்கி பேசியது இப்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வடிவேலு ப்ரண்ட்ஸ் படத்தை உதாரணமாக காட்டி மற்றோரு பெரிய நடிகரை தாக்கி பேசியுள்ளார்.

ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த இருவரும் எனக்கு கட்டுபட்டவர்களே. அந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் படங்களில் நான் நடித்து வந்தேன். நான் நடிகர்களை வாடா போடா என்று தான் அழைப்பேன். அது சிலருக்கு பிடிக்காது. இதனை காரணமாக கொண்டு என்னுடன் நட்பில் இருந்த சில நடிகர்களை என்னிடம் இருந்த பிரித்து விட்டார்கள்.

சில படங்களில் ஹீரோவை காட்டிலும் நான் சிறப்பாக நடித்தால், அதை பொறுக்க முடியாது ஹீரோக்கள் இயக்குனர்களிடம் முறையிடுவதும் உண்டு. ஆனால் இவ்வாறான ஒரு மனப்பான்மை மலையான படத்துறையில் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் படங்கள் நன்றாக வந்து, நல்ல வெற்றி அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்து படம் எடுக்கிறார்கள் என கூறியிருந்தார் வடிவேலு.

இது தற்போது அவருக்கு எதிராக மாறியிருக்கிறது. என்ன தான் வயதில் சிறிய நடிகர்கள் என்றாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் “வாடா போடா” என்று அழைப்பது அவமரியாதையான விஷயம். அதே போல தன்னை இப்போதும் பெரிய மார்க்கெட் உள்ளவராக நினைத்து கொண்டு மற்ற நடிகர்களை மறைமுகமாக தாக்கி பேசி வருகிறார் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவரும், இளம் நடிகரான அவரும், காமெடி முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போது, சில கருத்து வேறுபாடுகளால் வடிவேலு அந்த படத்திலிருந்து நீக்க பட்டு மற்றோரு பிரபல காமெடி நடிகர் நடித்து வெளியான படம் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் வடிவேலு நடித்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி இருந்தது. அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த அந்த ஹீரோ தற்போது பல மொழிகளிலும் நடிக்கும் வெற்றி நாயகனாக உள்ளார். அவரை மறைமுக தாக்கி பேசியுள்ளது ரசிகர்களை முனுமுனுக்க வைத்துள்ளது.

மேலும் பிரபல முன்னணி நடிகருடன் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள வடிவேலு அந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்போதும் மறைமுகமாக வெளிப்படுத்துவது சரியில்லை எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மீண்டும் இப்போது தான் நடிக்க துவங்கியுள்ள இவர், ஏற்கனவே இவ்வாறு நடிகர் விஜயகாந்தை பற்றி அவதூறாக தேவையற்ற கருத்துக்களை பேசி பட வாய்ப்புகள் இன்றி காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்