தளபதியால் வந்த நஷ்டத்தை வருங்கால விஜய் நீங்கதான் சரி செய்யணும்.. டிவி நடிகருக்கு கொக்கி போட்ட ஏஜிஎஸ் நிறுவனம்

2019ஆம் ஆண்டு விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வெளியான பிகில் படத்திற்கு பிறகு அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை. பிகில் படத்தால் சில பல நஷ்டங்களை சந்தித்ததாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும், அதற்கு விஜய் இப்போதைக்கு பிஸியாக இருக்கிறேன் என கூறி அனுப்பி விட்டதாகவும் ஒரு சமயத்தில் தகவல்கள் கிடைத்தன.

இப்படியிருக்கையில் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாம். இந்த முறை முன்னணி ஹீரோக்களை நம்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம் என மினிமம் கியாரண்டி நடிகர்களை குறிவைத்து களமிறங்கியுள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

அந்த வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்க உள்ளார்களாம். சிவகார்த்திகேயன் மற்றும் ஏஜிஎஸ் இணையும் இந்த புதிய படத்தை இயக்கப்போவது ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் கே வி ஆனந்த் தான்.

கே வி ஆனந்த் இயக்கிய சமீபத்திய படங்கள் மண்ணைக் கவ்வியதால் அவரும் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் பிகில் படத்தில் தயாரிப்பு விஷயத்தில் கோட்டை விட்ட ஏஜிஎஸ் நிறுவனம் இந்த முறை கவனமாக உள்ளதாம்.

sk-ags-cinemapettai
sk-ags-cinemapettai

இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர், அயலான் போன்ற படங்களை முடித்துவிட்டு டான் என்ற கல்லூரி கலாட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்