சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நயன்தாரா.. இவ்வளவு காசு இருந்தும் மனசு இல்லையே

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

மேலும் பிரபல நடிகைகளில் அதிக பட்சமாக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் இருக்கிறார். ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவரைப் பார்த்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமைபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர் தன்னுடைய சம்பளத்தை இன்னும் அதிகமாக உயர்த்தி இருக்கிறார்.

இயக்குனர் ரவிச்சந்திரன் அடுத்து நயன்தாராவை வைக்க ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அந்தப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு சமூக கருத்து திரைப்படமாகும். இந்த மாதிரி கதைகளில் நடிப்பதில் நயன்தாரா திறமையானவர்.

ஏற்கனவே அவர் இதுபோன்று கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். அதனால் இந்த படத்திற்கும் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் அதிகபட்ச சம்பளமாக 10 கோடி கேட்டு இருக்கிறார்.

ரவிச்சந்திரன் இயக்குனர் அட்லிக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த வகையில் நயன்தாராவுக்கும் இவர் பழக்கம் தான். அந்த நட்பின் அடிப்படையில் தான் இவர் நயன்தாராவை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் இவர் ஒரேயடியாக தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு கோடி அதிகப்படுத்தி இருப்பது அவருக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஏற்கனவே நயன்தாரா கோலிவுட், பாலிவுட் என்று கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு அதிக லாபம் பார்த்து வருகிறார். இதுதவிர தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவ்வளவு காசு வாங்கி அவர் என்ன செய்வார் என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்