அந்த காலத்திலேயே சொந்தமாக கப்பல், விமானம் வைத்திருந்த ஒரே நடிகை இவர்தான்.. நிஜத்திலும் ராணியாக வாழ்ந்தவர்!

சினிமா உலகில் எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது சொத்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்களுக்கு தான் முன்னுரிமை.

சினிமாவைப் பொருத்தவரை எப்போதுமே ஆண்களின் ராஜ்யம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகை பற்றி யாருக்காவது தெரியுமா.

இந்த காலகட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறலாம். ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு சம்பளம் கிடையாது.

அப்படி அந்த காலகட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர்தான் கே ஆர் விஜயா. இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித்தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா. முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்துக் கொடுக்க அவர் தயங்கியதில்லை.

அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் ராணியாக வாழ்ந்து வந்தாராம். தற்போது கப்பல் விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக வாழ்ந்து வருகிறார்.

ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த சினிமா உலகில் அவ்வப்போது இந்த மாதிரி நடிகைகளுக்கு ஏதாவது அதிர்ஷ்டம் அடித்தது. அப்படி கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது நயன்தாரா தான்.

kr-vijaya-cinemapettai-01
kr-vijaya-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்