ஹீரோக்களை வாடா போடா என்று அழைக்கும் ஒரே காமெடியன்.. வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும்

அன்றைய காலகட்டங்களில் இவருக்கு இணையாக காமெடியில் யாரும் கலக்க முடியாது என்ற அளவுக்கு காமெடி ஜாம்பவானாக இருந்தவர் கவுண்டமணி. தன்னுடைய வசனங்களில் கவுண்டர் மேல் கவுண்டர் கொடுத்து அவர் பேசும் அனைத்து காட்சிகளும் பலராலும் ரசிக்கப்பட்டது.

ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் என்றால் அது கவுண்டமணி மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு தினமும் ஒரு காரில் தான் வருவாராம். ஒரு படத்தில் இவர் உபயோகப்படுத்திய விக்கை மீண்டும் அடுத்த படத்திற்கு உபயோகப்படுத்த மாட்டாராம்.

இதை நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு அவர் பின்பற்றியதாக கூறுவது உண்டு. அப்பொழுது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி 800 காரை முதன் முதலில் வாங்கிய பெருமைக்குரியவர் கவுண்டமணி. மேலும் அவர் நடிக்கும் படத்தில் ஹீரோவுக்கு தரும் காஸ்ட்யூம் போல் இவருக்கும் தருவார்களாம்.

சினிமா துறையில் மூத்த நடிகரான இவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை எல்லாம் ஒருமையில் வாடா போடா என்று அழைப்பார். அப்படி அவர் அழைப்பதை ரஜினிகாந்த் உட்பட யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அவ்வளவு யதார்த்தமான மனிதராக இருப்பார்.

கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் செந்தில். ஒரு காலகட்டத்திற்கு பிறகு செந்தில் தனியாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு எந்தவித பொறாமையும் இல்லாமல் அவரை ஊக்கப்படுத்தி உள்ளார் கவுண்டமணி.

சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் இருப்பதை பெருமையாக கருதுவார்கள் ஆனால் கவுண்டமணி அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ரசிகர் மன்றங்களையே வெறுத்தார்.

அவர் லட்ச கணக்கில் சம்பாதித்தாலும் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அங்கு கொடுக்கும் உணவை மட்டும் தான் சாப்பிடுவார். மேலும் தன்னுடைய வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர். அதனாலேயே எதைப் பற்றியும் கவலை இல்லாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை இன்று வரை வாழ்ந்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்