ஏ.ஆர்.ரகுமான் தங்கச்சியே நீ ஏமாத்திட்ட.. என்னை நீ தப்பா பேசுவியா என வறுத்தெடுத்த பயில்வான்

டிவி சானல்களை விட தமிழ்நாட்டில் தற்போது யூடியூப் சேனல்கள் மட்டுமே அதிகமாக செயல்பட்டு வருகிறது.இதை நம்பி பலபேர் தொழிலாக செய்து வருகின்றனர்.இதில் சினிமா சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களில் சினிமாவில் உள்ளவர்களை அழைத்து வந்து நடிகர் நடிகைகளைப் பற்றி கேட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.இதில் மிகவும் பெயர் பெற்றவர் பயில்வான் ரங்கநாதன்.பிரச்சினைக்கு அஞ்சாமல் அனைத்து நடிகர் நடிகைகளின் ரகசியங்களை உண்மைகளையும் போட்டு உடைத்து விடுவார்.

சமீபத்தில் வெளியான பார்த்திபன் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது பற்றி பேசி அவரிடம் நேரடியாகவே கடற்கரையில் சண்டையிட்ட வீடியோக்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் நிறைய நடிகைகள் இவரிடம் சண்டை போடாத நடிகைகள் இல்லாத அளவிற்கு இருக்கின்றனர்.போலீசிடம் புகார் அளித்தும் அவர் தைரியமாக பேசி வருகிறார்.

Also Read: ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயில்வான் ரங்கநாதன்.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்

தற்போது அடுத்த பிரச்சினை சர்மிளா என்ற டிவி நடிகை இவர் சில புரட்சிகரமான கருத்துகளையும் கூறுவார்.இவர் வலைப்பேச்சு பிஸ்மி அவர்களை ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றிக் கேட்க பிஸ்மி அவர்கள் பயில்வான் ரங்கநாதன் ஒழுக்கமற்றவன் என்று கூறிவிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பயில்வான் என்னைப் பற்றி பேச இவர்கள் யார்.

ஷர்மிளா எப்படிப்பட்டவர் என்று எனக்கு தெரியும் மூன்று பேரை கல்யாணம் செய்து இன்று தனியாக சுற்றி வருகிறார். இவர் என்னைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு.ஷர்மிளா ஒரு தவறான நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி புகழ் பெற்றவர். இவரைப் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது கூற. ஆனால் எனக்கு அசிங்கமாக இருக்கிறது என்று நக்கலாக பேசிவிட்டார்.

Also Read: எந்த நடிகையுடன் கிசுகிசுக்க படாத ஒரே நடிகர்.. வெளிப்படையாக சொன்ன பயில்வான் ரங்கநாதன்

அடுத்து வலைப்பேச்சு பிஸ்மி என்னை ஒழுக்கமற்றவன் என்று கூறுவது சிரிப்பாக வருகிறது.நான் பொதுவாக பத்திரிகையாளர்களை எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் என்னால் இப்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை.பிஸ்மி முன்பு ஒரு காலத்தில் கப்பலுக்கு பெயிண்ட் அடுத்தது மறந்து விட்டாரா,தெருத்தெருவாக பாட்டுப் புத்தகங்கள் விற்றார் அது தெரியாதா, ஏ.ஆர்.ரகுமான் தங்கையை காதலித்து திருமணம் செய்து கழட்டிவிட்டு ஓடிவிட்டார் அதை மறந்து விட்டாரா.

இப்படியெல்லாம் பிஸ்மி செய்து விட்டு என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்வதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது.நீ யூடியூப் சேனலில் சினிமாவை தவறாக பேசி தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒருமுறையல்ல இரண்டு முறை அல்ல நான்கு முறை மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து அதை மறந்து விட்டாயா. என்னை சீண்டினால் இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பயில்வான் அசிங்கப்படுத்தி விட்டார்.

Also Read: இப்படி ஒரு மட்டமான வெற்றி தேவையா.? விருமன் படக்குழுவை கண்டபடி பேசிய பயில்வான்

இவர்கள் இப்படி செய்வது அனைத்து யூடியூப் சேனலுக்கு மிகப்பெரிய கண்டெண்ட் ஆக அமைகிறது. சோஷியல் நெட்வொர்க்கில் பொழுது போக்குவதற்கும் இது மிகவும் பயன்படுகிறது என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்