500 கோடி பிசினஸ் வேண்டாம் என உதறிய பிரபாஸ் பட தயாரிப்பாளர்.. காரணம் தெரியுமா.?

பாகுபலி என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடித்த பிரபாஸ் அதற்குப்பின் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் நடித்து வெற்றியும் கண்டார். 2019 இல் ஆக்ஷன் த்ரில்லர் கலந்த சகோ என்ற படத்தில் நடித்து அந்தப் படம் தமிழிலும் வெளியானது.

இந்த வருடம் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு இடையில் பல OTT தளங்கள் இந்த படத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர்.

கிட்டத்தட்ட 500 கோடி வரை பேரம் பேசி இந்த படத்தின் தயாரிப்பாளரான பூஷன் குமார், வம்சி ஒத்துக் கொள்ளவில்லையாம். ஏற்கனவே படத்திற்கான பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாக செலவாகி விட்டதாம், இருந்தாலும் கூட தயாரிப்பாளர்கள் தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என்று ஒரே முடிவில் உள்ளனர்.

இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர் தளபதி 65வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட் வரை எடுக்கப்பட்டு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

350 கோடி பட்ஜெட்டில் எடுத்துவிட்டு 150 கோடி லாபம் போதாது என்பது கூட இருக்கலாம். கொரோனாவின் இரண்டாவது ஊரடங்கு முடிந்தபின் கண்டிப்பாக தியேட்டரில் வெளிவரும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

radhe-shyam-prabas20
radhe-shyam-prabas20
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்