வெற்றிமாறன் படத்தில் அடம் பிடித்து நடித்த 5 இயக்குனர்கள்.. வட சென்னையில் மிரட்டி விட்ட ராஜன்

பெயருக்கு ஏற்பது கோலிவுட்டின் வெற்றி இயக்குனராகவே பார்க்கக்கூடிய இயக்குனர் தான் வெற்றிமாறன். இவர் கையில் எடுக்கும் படங்களுக்கெல்லாம் தேசிய விருது குவிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவருடைய படங்களில் இளம் நடிகர்கள் மட்டுமல்ல 5 டாப் இயக்குனர்களும் படம் பிடித்து விரும்பி நடித்துள்ளனர்.

அமீர்: பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். இவர் தொடர்ந்து ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களையும் அடுத்தடுத்து கொடுத்து, முன்னணி இயக்குனராக வலம் வந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிசாகவும் அவதாரம் எடுத்த அமீர் வெற்றிமாறன் வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். இதில் ஜோடியாக நடித்த ஆண்ட்ரியாவிற்கு கூட ராஜன் பொண்டாட்டி என்று அமீரின் கதாபாத்திரத்தை தான் அழுத்தி சொல்கின்றனர். அந்த அளவிற்கு ராஜன் ஆகவே அமீர் இதில் வாழ்ந்திருப்பார்.

வேல்ராஜ்: திரை உலகின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் தான் வேல்ராஜ். அதிலும் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான பொல்லாதவன் படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஆடுகளம், எங்கேயும் எப்போதும், வடசென்னை, விடுதலை போன்ற ஏகப்பட்ட படங்களுக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதன் பிறகு இவர் வேலையில்லா பட்டதாரி, தங்கமகள் போன்ற இரண்டு படங்களையும் இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், வட சென்னை போன்ற படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: விஜய், அஜித்துக்கு இணையாக வசூலை அள்ளிய சூரி.. விடுதலை படத்தின் மொத்த கலெக்ஷன் இதுதான்

ராஜீவ் மேனன்: மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜீவ் மோகன் நிறைய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் தலைமை செயலாளராக சுப்பிரமணியன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். இவர்தான் இந்த படத்தில் பெருமாளை பிடிப்பதற்கு கௌதம் மேனன் தலைமையில் டீமை உருவாக்கி படத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய கேரக்டராக நடித்திருப்பார்.

ராமதாஸ்: 1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு ராஜா ராஜாதான், ராவணன் என வரிசையாக அடுத்தடுத்த படங்களை இயக்கினார். சிறந்த எழுத்தாளருமான ராமதாஸ் பின்னாளில் நடிகராகவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் எதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

Also Read: வெற்றிமாறனின் ஆச்சரியமூட்டும் 5 அவதாரங்கள்.. வெப் சீரிஸ்க்கு கதை எழுதிய பொல்லாதவன்

சரவண சுப்பையா: சிட்டிசன், ஏ பி சி டி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் கலெக்டராக நடித்து அசத்தியிருப்பார்.

இவ்வாறு இந்த ஐந்து முன்னணி இயக்குனர்கள் தான் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடித்தாகவேண்டும் என அடம் பிடித்து நடித்திருக்கின்றனர். அதிலும் அமீர் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார்.

Also Read: ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்குமா.? பலமுறை வெற்றிமாறனை சுற்றி வந்த ஹீரோ, வச்சு செய்த சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்