ஈகோ காரணமாக சண்டை போட்ட 5 நட்சத்திரங்கள்.. சீமான் விஜயலட்சுமிக்கு முன்னாடி ஜோ போட்ட சண்டை

5 celebrities fought: சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் ஈகோ காரணமாக அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வது உண்டு. அப்படிப்பட்ட ஐந்து பிரபலங்களைப் பற்றி பார்ப்போம். அதிலும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு கழட்டிவிட்ட சீமானை பற்றி இப்போது சோசியல் மீடியாவில் விஜயலட்சுமி பகிரங்கமாக பேசி வருகிறார். அவருக்கு முன்பே இதைவிட மோசமாக ஜோதிகா சண்டை போட்டு இருக்கிறார்.

ரஜினி- ஜெயலலிதா: போயஸ் கார்டனில் ரஜினி மற்றும் ஜெயலலிதா இருவரும் ஒன்றாக வாசித்து வரும் சமயத்தில், சூப்பர் ஸ்டாரை தெருவில் காரை நிறுத்தி டிராபிக் உண்டு பண்ணியதால் போலீசாரை வைத்து ஜெயலலிதா வார்னிங் செய்திருக்கிறார். இது ரஜினியின் ஈகோவை சீண்டியதுபோல் ஆனதால் இருவரின் மோதலுக்கு காரணமாக அமைந்தது.

நெப்போலியன்- விஜய்: இவர்கள் இருவரும் போக்கிரி படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நெப்போலியன் நண்பர்கள் சிலர் விஜய் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் விஜய்யின் மேனேஜர் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் விஜய்யின் மேனேஜரை கோபத்தில் நெப்போலியன் அடித்துவிட்டார். இதன் பிறகு விஜய், நெப்போலியன் உடன் இதுவரை இணைந்து நடிக்காமல் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

Also Read: ரோலக்ஸ் வைத்து கனவை நினைவாக்கும் லோகேஷ்.. உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்கப் போகும் விஜய்

எம்ஜிஆர்- ரஜினி: ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன பில்லா படத்தின் மூலம் தான் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயலலிதா நடிக்க மாட்டேன் என சொன்னதும் ரஜினி சற்று கோபத்தில் இருந்தார். இதை அறிந்த எம்ஜிஆர் ரஜினியிடம் கோபப்பட்டு சண்டைக்கு போனார்.

சீமான்- விஜயலட்சுமி: தற்சமயம் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கி கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது விஜயலட்சுமியின் பேட்டி தான். ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் சமயத்தில் எங்கிருந்து வருவார் என தெரியாது, ஆனால் சரியான சமயத்தில் வந்து சீமானை நாரடித்து விடுவார்.

அந்த வகையில் இந்த முறை சீமான் தன்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் இதுவரை 7 முறை விஜயலட்சுமிக்கு தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை சிதைத்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். இதனால் நிச்சயம் சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என கண்ணீர் வடித்தபடி சோசியல் மீடியாவை பரபரப்பாகி கொண்டு இருக்கிறார்.

Also Read: விஜயலட்சுமி டேட்டிங் உறவில் இருந்த 4 பிரபலங்கள்.. அப்ராணிக்கு அப்ராணியா இருந்த பிரெண்ட்ஸ் அமுதா

ஜோதிகா- சிவகுமார்: மும்பை நடிகையான ஜோதிகா தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் சூர்யாவுடன் இணைந்து நடித்த பின் இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்தனர். ஆனால் தமிழ் பெண் தான் தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக வேண்டும் என சிவக்குமார் இவர்களது காதல் கல்யாணத்திற்கு ஒத்துக்கவே இல்லை.

ஏழு வருடம் சிவக்குமாரிடம் சூர்யாவிற்காக ஜோதிகா போராடி இருக்கிறார். அதன் பின் தான் இவர்களது திருமணம் நடந்திருக்கிறது. இதற்காக இப்பவும் ஜோதிகா சிவகுமார் மீது கோபத்தில் இருக்கிறார்.

Also Read: ஜோதிகாவை தொடர்ந்து மறுப்பு தெரிவித்த சிம்ரன்.. கடைசியாக தளபதி 68 படத்திற்கு ஓகே சொன்ன நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்