பழைய காதலை வைத்து கதையை உருவாக்கிய விக்னேஷ் சிவன்.. பதிலுக்கு நயன்தாரா வைத்த ஆப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சமந்தா நயன்தாரா நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரமோஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடக்க தொடங்கியுள்ளது. படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் சார்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமாருடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் வெளியான பின் தங்களது திருமண அறிவிப்பை விக்னேஷும் நயன்தாராவும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெளியாக ஒரீரு நாட்களே உள்ள நிலையில் படத்தை குறித்து நயன்தாரா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. பெரிதாக படங்களின் ப்ரோமோஷன் வேலைகளில் இடுபடாத நயன்தாரா இந்த படத்திற்கு பிஸியாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

காத்து வாக்கு ரெண்டு காதல் படத்தின் கதை பிரபுதேவா அவரது மனைவி இவர்கள் வாழ்க்கையில் மூன்றாவதாக வந்த நயன்தாரா அதே போல் இந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மனைவி மூன்றாவதாக சமந்தா காதலியாக வருகிறார். இது அப்படியே பிரபுதேவா மனைவி நயன்தாரா கதையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

படம் நடிக்கும் வரைக்கும் தெரியாத நயன்தாராவிற்கு படம் நடித்து முடித்த பின் தன்னுடைய வாழ்க்கையில் ஆனால் காதலை வைத்து தான் வைத்து படமாக எடுத்துள்ளார் என்பது புரிந்து கொண்டுள்ளார். இதனை விக்னேஷ் இடம் கேட்டபோது இருவருக்கிடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.

அதனால் கோபமடைந்த நயன்தாரா நான் காத்துவாக்குல 2 காதல் படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டேன் என கூறியுள்ளார். சொந்த தயாரிப்பாக இருந்தாலும் வரமாட்டேன் என கோபமாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். 4 வருடங்களுக்கு மேல் காதலித்து தற்போது கல்யாணம் வரை வந்துள்ள இவர்களது உறவில் சிறிய விரிசல் காணப்படுகிறதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்யாணத்திற்காக நிறைய கோயில்களுக்கு சென்று நிறைய பூஜை, பரிகாரங்கள் என செய்து வந்த இவர்களது கல்யாண முடிவு இந்த படத்தால் நின்று விடுமோ என அச்சம் எழுந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்