உயிரைக் கொடுக்கத் துணிந்த பாரதிகண்ணம்மா.. ஷாக்கான வெண்பா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக பிரிந்து வாழும் கணவன் மனைவியான பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து இருந்தாலும் அவர்களது மனதில் ஏதோ ஒரு மூலையில் பாசம் இருந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கண்ணம்மா, வழியில் ஒரு திருடன் பாரதியின் காரில் இருந்த பாரதி உடைய பர்ஸ்சை திருடிக் கொண்டு ஓடுகிறான். அப்போது பாரதி தன்னுடைய காரில் பழுது ஏற்பட்டதால் அதை முன் பகுதியில் இருந்த சரி செய்து கொண்டிருக்கிறான்.

எனவே அந்தத் திருடனை கண்ணம்மா பார்த்துவிட, கையில் இருக்கும் தேங்காயை எடுத்து விட்டு எறிந்து திருடனைப் பிடிக்க முயற்சிக்கிறாள். இதைப்பார்த்த பாரதியும் சுதாரித்துக்கொண்டு கும்பலாக திருட வந்த திருடனை அடித்து உதைக்கிறான்.

இடையில் ஒரு திருடன் பாரதியின் வயிற்றில் கத்தியால் குத்திய போது, அதை தன்னுடைய கையை இடையில் காட்டில் கண்ணம்மா தடுத்து நிறுத்துகிறார். அப்போது கண்ணம்மாவின் கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது.

உடனே பாரதி, கண்ணம்மாவை கையில் ஏந்திக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறான். அங்கு கண்ணம்மாவின் கையில் ரத்தக் குழாய் அடைபட்டு விட்டதால், உடனே ஆபரேஷனுக்கு ரெடி பண்ணுங்கள் என்று டாக்டர் பாரதி அங்கிருப்பவர்களிடம் கூறுகிறான்.

இதை அனைத்தையும் வெண்பாப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கண்ணம்மாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பாரதி துடிதுடிப்பது வெண்பாவிற்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அத்துடன் பாரதியை கண்ணம்மாவிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க நினைக்கும் வெண்பாவிற்கு இந்த சம்பவத்தை பார்த்த பின் ஷாக்காகி உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்