பாக்யாவை மட்டம் தட்டின கோபியின் நிலைமை பரிதாபம்.. ஒரு முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி இத்தனை நாளாக கடன் பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விஷயம் வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை கை மீறிப் போனதால் கம்பெனியை இழுத்து மூடும் நிலைமைக்கு வந்துவிட்டது. அத்துடன் வேலை பார்த்த ஊழியர்களுக்கும் இரண்டு மாத சம்பளத்தை பாக்கி வைத்திருக்கிறார்.

இதனால் ஊழியர்கள் அனைவரும் கோபிக்கு நெருக்கடி கொடுத்து சம்பளத்தை கேட்ட நிலையில் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டிருக்கிறார். இதனால் நொந்து போன கோபி வழக்கம்போல் குடி தான் எல்லாத்துக்கும் மருந்து என்று தவறாக புரிந்து கொண்டு குடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார். அங்கே ராதிகா கோபியை பார்த்து நீங்கள் ரொம்ப களைப்பாக இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு ஏதாவது டீ போட்டு தருகிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு கோபி நானே போட்டுக்கொள்கிறேன் என்று கிச்சனில் போய் அலப்பறை கூட்டுகிறார். அதாவது அடுப்பை பற்ற வைத்துவிட்டு அதில் பால் காய்ச்சாமல் பக்கத்து அடுப்பில் வைத்து கோபி செய்த அட்ராசிட்டியை பார்த்து ராதிகா கோபத்தில் கோபி கையை எரிகிற அடுப்பில் வைத்து விடுகிறார். அதன் பின் கோபியை இழுத்து ரூமுக்கு கூட்டிட்டு போய் லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.

Also read: அண்ணன்களை பிளாக் மெயில் பண்ணும் சக்தி.. குணசேகரனுக்கு எதிராக சாருபாலாவிற்கு கிடைத்த துருப்புச் சீட்டு

அதற்கு உடனே கோபி நம்ம குடிச்சதுக்கு ராதிகா இந்த மாதிரி கோபப்படுகிறார். கம்பெனியை க்ளோஸ் பண்ணிட்டு கடனில் இருக்கிறேன் என்று தெரிந்தால் இன்னும் என்னெல்லாம் செய்வாரோ என்று கோபி புலம்ப ஆரம்பித்திருக்கிறார். இதற்கு இடையில் பாக்கியா எழில் மற்றும் மாமனார் அனைவரும் சேர்ந்து ரெஸ்டாரண்டை வாங்குவதற்கு எல்லாத்தையும் முறைப்படி செய்து விட்டார்கள்.

திரும்பி வீட்டிற்கு வந்த பொழுது பாக்யா ரெஸ்டாரண்டுக்கு ஓனராகிவிட்டார் என்கிற விஷயத்தை எழில் சந்தோசமாக அனைவரது முன்னணியில் கூறுகிறார். இதைக் கேட்ட கோபி வழக்கம்போல் திருட்டு முழி முழித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விடுகிறார். அடுத்து ராதிகா பாக்யாவிற்கு வாழ்த்து சொல்லி நட்பின் ஆழத்தை உறுதிப்படுத்துகிறார்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினையாக முடிவுக்கு வரும் நிலையில் கோபியின் நிலைமையும் புரிந்து கொண்டு அதற்கு ராதிகா அல்லது பாக்கியா இவர்களில் யார் உதவி செய்வார்கள் என்பது தான் நாடகத்தின் கடைசியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. ஆக மொத்தத்தில் இந்த சீரியலுக்கு கூடிய விரைவில் சுபம் போட நேரம் வந்துவிட்டது.

Also read: டிஆர்பி-யில் கலக்கும் டாப் 6 சீரியல்கள்.. சிங்கப் பெண்ணால் ஆட்டம் கண்ட பிரபல சேனல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்