பேமிலி மேன் சீரிஸ் ஏன் நடித்தேன் தெரியுமா.? பல்லாவரம் சமந்தா வெளியட்ட பதிவால் ஆடிப்போன கோலிவுட்!

சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இவரது கதாபாத்திரம் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளது என கருத்து தெரிவித்து ஒரு வார காலமாக இணையதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சமந்தா.

மேலும் இந்த சீரிஸில் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது ஆனால் படக்குழுவினர். இதற்கு எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் OTTயில் வெளியிட்டனர்.

தற்போது சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தனது கதாபாத்திரத்தை பற்றியும் தவறாக புரிந்து கொண்ட நபர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தி ஃபேமிலி மேன் தொடரில் தான் நடித்த கதாபாத்திரத்தையும் தனது நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர் அது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மேலும் தனது கதாபாத்திரம் ராஜி எனவும் தெரிவித்துள்ளார்.

samantha akkineni
samantha akkineni

இந்த வெப் சீரியஸ் நடிப்பதற்கு முன்பு இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஈழப்போரில் பெண்களின் உண்மை கதைகளை உள்ளடக்கிய ஆவண புகைப்படங்களை தனது கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த ஆவண புகைப்படத்தில் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் மட்டும் படத்தில் இருப்பதை பார்த்தேன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த பிறகும் ஏன் இதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதையும் உணர்ந்தேன் என கூறியுள்ளார். மேலும் இந்தப் போரினால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பல்வேறுவிதமான நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அவலத்தையும் கண்டேன் எனக் கூறியுள்ளார்.

அதனைப் பார்த்த பிறகுதான் இந்த கதாபாத்திரத்தை ஏற்றதாகவும் இந்த கதாபாத்திரம் கற்பனையாக இருந்தாலும் ஈழப்போரில் தங்களது உயிரை விட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்