வளர்த்த கெடாவே மாரில் முட்டியது.. வைரமுத்துவை சீண்டி பார்த்த பிரபலம்

Vairamuthu : அதாவது வைரமுத்துவின் பாடல்களுக்கு இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை எண்ணற்ற பாடல்கள் எழுதியுள்ள நிலையில் பல பாடகி மற்றும் பாடகர்களை வைரமுத்து வளர்த்து விட்டிருக்கிறார். ஆனால் வளர்த்த கெடாவே மாறில் முட்டியது என்ற பழமொழி இருக்கிறது.

அப்படிதான் வைரமுத்துவால் வளர்ந்த ஒரு பிரபலம் வளர்ந்த பின் அவர் மீதே சேற்றை வாரி இறைத்திருக்கிறார். அதாவது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வேண்டுமென்றே வைரமுத்துவின் பெயரை கெடுத்து இருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

அதாவது சில வருடங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சின்மயி வைரமுத்துவின் மீது மீடு புகார் வைத்திருந்தார். மேலும் வைரமுத்து தனக்கு டார்ச்சர் கொடுத்ததாக புகார் கொடுத்திருந்தார். ஆனால் சின்மயின் திருமணத்தின் போது வைரமுத்துவை தான் சிறப்பிக்கும் படி அழைத்திருந்தார்.

Also Read : 7 முறை தேசிய விருதை தட்டி பறித்த வைரமுத்து.. எந்தெந்த பாடல்களுக்கு தெரியுமா?

அதோடுமட்டுமல்லாமல் அவரது காலில் விழுந்து தொட்டு கும்பிட்டு இருந்தார். இந்நிலையில் சினிமாவில் பிரபலம் அடைந்த பிறகு வைரமுத்துவின் மீது இவ்வாறு வெளிப்படையாக புகார் கொடுத்தது அவரது பெயருக்கு மிகப்பெரிய களங்கத்தை விளைவித்தது. அதோடு மட்டுமல்லாமல் இப்போதும் வைரமுத்துவை பற்றி அவதூறாக தான் பேசி வருகிறார்.

ஆனால் அவர் சொல்லுவதற்கு எந்த ஆதாரமும் இப்போது வரை இல்லை. அப்போது வாய்ப்பு கிடைத்ததால் இதைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்த சின்மயி தனக்கு சினிமா வாய்ப்பு குறைய தொடங்கிய போது தான் இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தார். எனவே பப்ளிசிட்டி மற்றும் சுயநலத்திற்காக தான் சின்மயி இவ்வாறு செய்துள்ளார் என அவர் மீது ஒரு கருத்து வைக்கப்படுகிறது.

Also Read : கமல் எழுதி மாஸ் ஹிட் அடித்த 5 பாடல்கள்.. வைரமுத்து, வாலிக்கு டஃப் கொடுத்து பட்டையை கிளப்பிய வரிகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்