பப், பார்ட்டி என ஆட்டம் போடும் நடிகை.. ஆண் நண்பர்களுடன் விடிய விடிய நடந்த கூத்து

பிரபல நடிகை ஒருவருக்கு இப்போது சினிமா வாய்ப்புகள் வருவது முற்றிலுமாக குறைந்துவிட்டது. அவர் நடித்த ஒன்றிரண்டு படங்களும் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அதனால் நடிகை சில காலம் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார்.

ஆனால் அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனால் சினிமாவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்ற முடிவுக்கு நடிகை வந்துவிட்டாராம். அதை தொடர்ந்து இப்போது அவர் வாழ்க்கையை தன் போக்கில் ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்.

Also read: பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய இயக்குனர்.. கர்மாவால் 40 வயதாகியும் கல்யாணமாகாமல் இருக்கும் மகள்

அதிலும் நடிகைக்கு ஆண் நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாகவே நடிகை இப்போது சினிமாவில் கவனம் செலுத்தாமல் அவர்களுடன் பப், நைட் பார்ட்டி என்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

இதுதான் இப்போது கோடம்பாக்கத்தில் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் நடிகை விடிய விடிய சரக்கு அடித்து விட்டு பார்ட்டி என்கிற பெயரில் ஜல்சா செய்து கொண்டிருக்கிறாராம். அதனாலயே இப்போது இவரை தங்கள் படங்களில் புக் செய்ய பலரும் தயங்குகிறார்களாம்.

Also read: குடி போதையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய ஹீரோ.. கார் பார்க்கிங் கசமுசாவால் சிக்கிய ஜோடி

ஏனென்றால் நடிகை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சரக்கு அடித்து விட்டு மட்டையாகி இருக்கிறார். அதனாலேயே அந்த நிகழ்ச்சி பல சிக்கலை சந்தித்தது. இப்படிப்பட்ட காரணங்களால் நடிகை இப்போது ஓரம் கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் அது பற்றி கவலைப்படாத அம்மணி தன் இஷ்டப்படி வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்