இயக்குனர்களுக்கு 2 முக்கியமான கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன்.. இது இருந்தா பட வாய்ப்பே வேண்டாமாம்!

விஜய் டிவி மூலம் கோலிவூட்டில் கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் படம் வெளிவருவது என்றாலே குடும்பத்துடன் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்.

அந்த வகையில் குழந்தைகள் மற்றும் பெண்களை கவரும் வகையில் அவரது கதையும், கதாபாத்திரம் அமையும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இரண்டு முக்கியமான கண்டிஷன்களை சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஒன்று புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கக்கூடாது, அதேபோல் மது அருந்துவது போன்ற காட்சிகளும் இருக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது போன்ற காட்சிகளின் மூலம் நான் ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று இயக்குனர்கள் கட்டளையிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது டான் மற்றும் டாக்டர் படங்களில் நடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த படங்கள் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்டர் படம் ஏற்கனவே மார்ச் மாதத்தில் வெளிவருவதாக இருந்தது.

doctor-cinemapettai
doctor-cinemapettai

ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு கொரோனாவிற்கு 25 லட்சம் நிதி கொடுத்து பாராட்டுகளையும் பெற்றார் சிவகார்த்திகேயன்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்