கமலுக்கு முன்பே மிரளவிட்ட நடிகர்.. இவர் மாதிரி இனி ஒருத்தர் பொறந்து தான் வரணும்!

தமிழ் சினிமாவில் நடிப்பு ஜாம்பவானாக நம்மை பிரமிக்க வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய கம்பீரமான குரலும், அற்புதமான உடல் மொழியும் பார்த்து அதிசயிக்காதவர்களே கிடையாது. அந்த அளவுக்கு தன் வாழ்க்கையை நடிப்புக்காக அர்ப்பணித்தவர்.

சிவாஜி அளவுக்கு வேறு யாராலும் சினிமாவில் நடிக்க முடியாது. தற்போது இருக்கும் நடிகர்களில் கமல்ஹாசன் ஒருவர்தான் சிவாஜிக்கு ஈடாக கொஞ்சமாவது நடிக்கக் கூடியவர் என்று பெயர் பெற்றுள்ளார். இவர் ஒன்பது வேடங்கள் ஏற்று நடித்த திரைப்படம் தசாவதாரம்.

இந்த திரைப்படத்தில் அவர் வயதான பாட்டி மற்றும் வெவ்வேறு மொழியைச் சார்ந்த நபர் என்று பல வேடங்களை ஏற்று நடித்தார். இதற்காக அவர் பல விதமாக தன்னுடைய உடல் மொழியை மாற்றி அதற்காக பல மணி நேரம் மேக்கப் செய்து ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்தார்.

இதை பார்த்து அவரை ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இதன் காரணமாக அவர் உலக நாயகன் என்று அனைவராலும் புகழப்பட்டார். மேலும் இப்படம் தமிழ் சினிமாவின் ஒரு அதிசயமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே இந்த அதிசயத்தை நடத்திக் காட்டியவர் சிவாஜி கணேசன்.

1964 ல் அவரின் நடிப்பில் வெளியான நவராத்திரி என்ற திரைப்படத்தில் அவர் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார். இதில் அவர் தன் உடல் மொழியில் ஒன்பது விதமான நவரசங்களையும் காட்டி அசத்தி இருப்பார். அந்த ஒன்பது கதாபாத்திரமும் கோபம், வீரம் உள்ளிட்ட ஒன்பது குணாதிசயங்கள் கொண்டதாக இருக்கும்.

sivaji
sivaji

அதிலும் ஒரு காட்சியில் அந்த ஒன்பது கேரக்டர்களையும் ஒரே நேரத்தில் காட்டியது அனைவரையும் பிரமிக்க வைத்தது. இப்படி ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்ததற்காக சிவாஜி கணேசன் பல விருதுகளையும், பாராட்டையும் பெற்றார். இன்றும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு சிறப்புமிக்க திரைப்படமாகவும் உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்