ஹீரோயின் பிடிக்கவில்லை என அடம் பிடித்த சிம்பு.. ஹீரோவையே மாற்றிய இயக்குனர்

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் சினிமா துறையில் தனக்கென ஒரு நீங்கா இடம் பிடித்தவர். அயன், கோ, கவன் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அசத்தியவர். ஒளிப்பதிவாளர், இயக்குனர், போட்டோகிராபர் என பன்முக திறமை கொண்டவர் கே வி ஆனந்த்.

2011ஆம் ஆண்டு இவரால் இயக்கப்பட்டு வெளிவந்த படம் கோ. இந்த படத்தில் ஜீவா மற்றும் அஜ்மல் என 2 கதாநாயகர்கள் நடித்திருப்பார்கள். படத்தின் கடைசி நேரத்தில் அஜ்மல் தான் வில்லன் என ஜீவாவிற்கு தெரியவரும், அந்த அளவிற்கு கதையை நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பார்  ஆனந்த்.

இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் தமிழ் திரையுலகில், ஒரு காலத்தில் ஹீரோயினாக ஆட்சிசெய்த ராதாவின் மகள். இவர் பெயர் கார்த்திகா நாயர். இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும் இவருடைய கதாபாத்திரத்தை மற்றும் நன்றாக செய்திருப்பார்.

கோ படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது சிம்புதான். கேவி ஆனந்த், சிம்புவிற்கு தான் இந்த கதையை எழுதியுள்ளார். சிம்புவிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் பெறப்பட்டது. கடைசி நேரத்தில் ஹீரோயினை செலக்ட் செய்யும்போது சிம்பு சில தேவையில்லாத வேலைகளை செய்துள்ளார்.

எனக்கு இந்த ஹீரோயின் பிடிக்கவில்லை, இவரை மாற்றுங்கள் என அடம்பிடித்து உள்ளார். எல்லாவற்றையும் மனதில் வைத்து ஓரளவு கதையை முடித்துவிடலாம் என எண்ணிய கேவி ஆனந்த்திற்கு, இது பேரதிர்ச்சியாக இருந்தது.

செய்வதறியாது முழித்த கேவி ஆனந்த் கடைசியில் சிம்புவையே மாற்றிவிட்டார். அவருக்கு பதிலாக ஜீவாவை தேர்ந்தெடுத்து படத்தை வெற்றியடையவும் செய்து விட்டார். இதனால் முன்னணி ஹீரோயின் தான் வேண்டும் என அடம் பிடித்த சிம்புவை மாற்றி சக்சஸ் கொடுத்தார் கேவி ஆனந்த்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்