பாக்கியாவின் மருமகளின் மனசை மாற்ற நினைக்கும் சில்வண்டு.. கிடைச்ச கேப்பில் ஸ்கோர் பண்ணிய வீட்டுக்காரர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தற்போது சொந்தக் காலில் நின்னு ஓரளவுக்கு முன்னுக்கு வந்து விட்டார். அத்துடன் ரெஸ்டாரண்டுக்கு ஓனராகும் வகையில் பிசினஸிலும் கல்லா கட்டப் போகிறார். இதற்கிடையில் பாக்கியாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.

அதில் ஜெனி, இனி செழியன் தேவையில்லை என்று விவாகரத்து நோட்டீசை அனுப்பி விட்டார். இதனால் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயிருந்தார்கள். இதை இன்னும் அதிகரிக்கும் விதமாக அமிர்தாவின் முன்னாள் கணவர் நேரடியாக வீட்டிற்கு வந்து எல்லாரையும் டார்ச்சர் பண்ணுகிறார். அதாவது அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் என்னுடன் அனுப்பி வைத்து விடுங்கள் என்று கூறுகிறார்.

இதற்கு யாராலும் சரியான பதில் சொல்ல முடியாத நேரத்தில் கோபி, மகனின் வாழ்க்கைக்காக அமிர்தாவின் முன்னாள் கணவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் பாக்கியா, கோபியிடம் இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதலாக நின்னு பேசியதற்கு ரொம்ப நன்றி என்று கூறுகிறார்.

Also read: குணசேகரனை டம்மியாக்கிய எதிர்நீச்சல் சீரியல்.. இப்போ டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டும் அப்பத்தா

இதனை அடுத்து பாக்யாவின் மகள் இனியா, அண்ணன் செழியன் படுகிற கஷ்டத்தை பார்க்க முடியாமல் நேரடியாக ஜெனியை தேடி போகிறார். அங்கே ஜெனியை பார்த்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள். எங்க அண்ணன் ரொம்ப பாவம் நீங்கள் இல்லாமல் நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம் என்று கூறுகிறார். ஆனாலும் இதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் ஜெனி மௌனமாக இருந்து விடுகிறார்.

அதன் பின் இனியா வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் ஜெனியை பார்த்து பேசியதை சொல்கிறார். அதற்கு பாக்யா நீ ஏன் தனியா சொல்லாமல் போனாய் என்று கண்டிக்கிறார். அடுத்ததாக வீட்டில் நடந்த பிரச்சினையைப் பற்றி இனியாவிடம் சொல்கிறார். உடனே இனியா அம்மாவிற்கு ஆறுதல் சொல்கிறார். ஆக மொத்தத்தில் தற்போது இரண்டு மகன்களின் வாழ்க்கையும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் எப்போதுமே பாக்யாவை குறை சொல்லும் கோபி முதல் முறையாக பிரச்சனையை தீர்க்க முடிவு பண்ணியது உண்மையிலே பாராட்டக்கூடியதாக இருக்கிறது. அத்துடன் எழில் கஷ்டத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய அப்பாவை அரவணைத்துக் கொள்வது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

Also read: ஜனனியின் அப்பா எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி.. அப்பத்தாவிற்கு ஆப்பு வைக்க போகும் நாச்சியப்பன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்