நயன்தாராவின் திருமணத்திற்கு செல்லாத அழகு நடிகை.. வேதனையில் இருக்கும் விக்னேஷ் சிவன்

கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் காதல் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இன்று ஜூன் 9ஆம் தேதி இன்று இவர்களது திருமணம் நடந்துள்ளது.

இதில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என குறிப்பிட்ட சில பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்த அழைத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

சமந்தா, நயன்தாரா என படு பிசியான நடிகைகள் ஒரே படத்தில் நடித்திருந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இல்லாமல் இவர்கள் இருவரும் நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆனால் நயன்தாராவின் திருமணத்திற்கு சமந்தா வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா, நயன்தாராவின் திருமணத்திற்கு செல்ல மிகவும் விரும்பியுள்ளார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தற்போது பட வேலைகளில் சமந்தா படு பிசியாக உள்ளார். தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார்.

இதனால் தற்போது சமந்தாவால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையாம். ஆனால் தன்னுடைய படப்பிடிப்பு முடிந்த பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை நேரில் சென்று வாழ்த்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்