கல்யாணம் பிடிக்காத நயன்தாரா.. அப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் விக்னேஷ் சிவன்.. ஐயோ பாவம்!

காதலிக்கும் போது கூட சந்தோசமாக இருக்கிறது, ஆனால் திருமணம் என்ற வார்த்தையை எடுத்து விட்டாலே அது கடைசியில் தேவையில்லாத பிரச்சனைகளில் முடிந்து விடுகிறது என நயன்தாரா சொன்னதிலிருந்து விக்னேஷ் சிவன் முகத்தில் ஈ ஆடவில்லையாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாராவுக்கு காதல் சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. பல நடிகர்களுடன் காதல் வலையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டார்.

இருந்தாலும் அம்மணிக்கு எப்போதுமே கெத்து தான். தற்போது நயன்தாரா வசம் இருப்பது இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தின் போது இருவருக்கும் காதல் மலர்ந்து கடந்த சில வருடங்களாக காதல் ஜோடிகளாக சுற்றி வருகின்றனர். மேலும் அவ்வப்போது முத்தம் கொடுப்பது, கட்டி பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இருந்தாலும் கல்யாணம் எப்போது என்ற கேள்வி தொடர்ந்து அவர்களை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில்கூட விக்னேஷ் சிவன் அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தார். ஆனால் பதில் மழுப்புவது போல் இருந்ததால் அதைப் பற்றி கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்துள்ளனர்.

அப்போது அம்மணியின் பல வேலைகள் தெரியவந்துள்ளது. விக்னேஷ் சிவன் கல்யாணம் என்ற வார்த்தையைச் சொன்னாலே, காதலிக்கும் போது தான் சந்தோஷமாக இருக்கிறது. திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அது பிரேக்கப்பில் தான் முடிகிறது, சோ சுத்துற வரைக்கும் சுத்தலாம் என சூசகமாக சொல்லி விட்டாராம்.

இதைப் பார்க்கும்போது வல்லவன் படத்தில் சிம்பு, ஒரு ரெஸ்டாரன்டில் நயன்தாரா வரும் காட்சி ஒன்றில் ஒரு வசனம் வைத்திருப்பர். அதில் ஒரு இளம் பெண், வந்தியா, இப்படி தடவுனியா, ஜாலியா இருந்தியா, அப்படியே இரு, எதுக்கு கல்யாணத்தைப் பற்றி பேசுற? என கிண்டல் செய்வார். தற்போது விக்னேஷ் சிவனைப் பார்த்தால் அந்த வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறதாம் பலருக்கு.

nayanthara-vignesh-shivan-cinemapettai
nayanthara-vignesh-shivan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்