கார்த்தி அதிகமாக சொந்த தயாரிப்புகளில் நடிக்க காரணம் இதுதான்.. அரசனை நம்பி புருஷனை கைவிட முடியாதாம்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி பெரிய வெற்றிகளை குவித்து வரும் நடிகர் கார்த்தி அதிகமாக சொந்த தயாரிப்புகளில் நடித்து வருவது சினிமா வட்டாரங்களில் ஒரு பெரும் பேச்சை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் பருத்திவீரன் அறிமுகத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன. தென்னிந்திய சினிமாவில் அதுவரை செய்திருந்த அனைத்து அறிமுக நடிகர்களின் சாதனைகளை துவம்சம் செய்த திரைப்படம் பருத்திவீரன்.

அவரைத் தொடர்ந்து தற்போது வரை குறைவான அளவே தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ள கார்த்தி பெரும்பாலும் தன்னுடைய உறவினர் மற்றும் சொந்த தயாரிப்புகளில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்குக் காரணம் ஒரு படம் கைவிட்டாலும் இன்னொரு படத்தின் மூலம் லாபம் ஈட்டி விடலாம் என்பது சினிமாவில் எழுதப்பட்ட விதி தான். அதுவே சொந்த தயாரிப்பு என்றால் பிரச்சனை இல்லை. இதுவே வேறு ஒரு தயாரிப்பாளருக்கு படம் நடித்துக் கொடுத்து அந்தப்படம் சரியாக செல்லவில்லை என்றால் உடனடியாக அடுத்த படம் கால்சீட் வாங்கிக் கொள்வார். அது மட்டும் இல்லாமல் தன்னால் லாபம் கிடைக்கும் வரை அந்த நடிகரை தொடர்ந்து டார்ச்சல் செய்வார்கள்.

இதன் காரணமாகவே யாருடனும் சேர்ந்து வசமாக சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற யோசனையில் தான் தொடர்ந்து சொந்த தயாரிப்புகளை நடித்து வருகிறாராம். தோல்வி படங்கள் கொடுத்த நடிகர்களை கோலிவுட் தயாரிப்பாளர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை சொல்ல வேண்டுமா என்ன.

அது மட்டுமில்லாமல் பல கோடி அதிகமாக சம்பளம் கொடுத்து கார்த்தியை வேறு தயாரிப்பாளர்கள் அழைத்தாலும் தற்போதைக்கு தன்னுடைய கால்சீட் அனைத்துமே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஸ்டுடியோ கிரீன், 2டி என்டர்டெயின்மென்ட் போன்ற தன்னுடைய சொந்தத்திற்குத்தான் என்பதில் உறுதியாக உள்ளார்.

karthi-cinemapettai-01
karthi-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்