பா ரஞ்சித்துடன் படம் செய்ய இதுதான் காரணம்.. சார்பட்டா குறித்துச் சொன்ன ஆர்யா

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் எதிர்பார்த்ததையும் மீறி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தற்போது ஒவ்வொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டது. அந்த அளவுக்கு அவர்களது கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முதலில் சார்பட்டா படத்தின் கதை சூர்யா மற்றும் கார்த்தி போன்றோருக்கு செல்லப் பட்டது என ரஞ்சித்தே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் ஆர்யா இந்த படத்திற்குள் எப்படி வந்தார்? என்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆர்யா தெரிவித்துள்ளார்.

sarpatta-cinemapettai
sarpatta-cinemapettai

ஆர்யாவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக சார்பட்டா படத்தின் வெற்றி பார்க்கப்படுகிறது. ஆர்யா நீண்ட நாட்களாக ஒரு ஸ்போர்ட்ஸ் படம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம். அந்த நேரத்தில் தான் பா ரஞ்சித் சார்பெட்டா பட கதையை கொண்டு வந்தாராம்.

மேலும் பா ரஞ்சித் படத்தில் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் எதார்த்தமாகவும், மக்கள் மத்தியில் நம்மை கொண்டு செல்லும் படமாகவும் இருக்கும் என நம்பித்தான் இந்த படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார் ஆர்யா.

அதேபோல் இன்று நடந்தது சந்தோசமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக ஆர்யாவின் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. ஆனால் கடைசியாக வெளிவந்த மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் தொடர் வெற்றியை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து ஆர்யாவின் படங்கள் என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்