நடுராத்திரியில் நடிகையின் வீட்டுக்கு சென்று டோஸ் விட்ட ரஜினி.. மகளுக்காக தலைவர் எடுத்த மாணிக் பாட்ஷா அவதாரம்

Actor Rajini: ரஜினி எந்த அளவிற்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் அவருடைய வீட்டிற்கு சிறந்த அப்பாவாகவும் பொறுப்பான விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து பார்த்து வந்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய இரண்டு மகளுக்கும் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனால்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் பின்னணியில் நடந்திருந்தாலும் தனுஷ் மீது இது சம்பந்தமாக பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதாவது இவருடன் நடித்த நடிகை ஒருவரிடம் நெருங்கி பழகி வந்ததாக பல செய்திகள் வெளியாகி வந்தது. இதனை தெரிந்து கொண்ட ரஜினி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார்.

Also read: வியாபாரத்திற்கு வந்த சிவாஜியின் அன்னை இல்லம்.. ரஜினி செய்த பெரிய உதவி

அதாவது கண்ணழகி நடிகை ஒருவரின் வீட்டுக்கு நடுராத்திரி என்று கூட பார்க்காமல் பிரச்சனையை சரி செய்ய ரஜினி போனார் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதுதான் முக்கியமானது. அதாவது எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான் என்று தெரிந்தாலும் நடிகையை தேடி போய் கண்டித்து இருக்கிறார்.

அந்த நடிகை மீது அதிகமான அபிப்ராயம் இருந்ததால் இவருடைய மடியிலேயே தவம் கிடப்பது போல் தனுஷ் இருந்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி நேரடியாக போய் பிரச்சனையை சரி செய்து இருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை தனுஷ்க்கு ஜோடியாக நடித்த அமலாபால் தான்.

Also read: ஒரிஜினல் சக்சசை ரகசியமாய் கொண்டாடிய ஜெயிலர் படக்குழு.. ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு ரஜினி பார்த்த வேலை

இவர்கள் இருவருமே நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்கள். அதனால் தனுஷ், அமலா பால் இருந்த பிளாட்டிலேயே தங்கி இருந்திருக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரஜினி நடுராத்திரியில் அமலபால் வீட்டிற்கு சென்று “இதோடு நிறுத்திக் கொள், இல்லையென்றால் உன்னுடைய சினிமா கேரியரை க்ளோஸ் செய்து விடுவேன்”. இனிமேல் இங்கே இருக்க கூடாது என்று மிரட்டி அவரை விரட்டி இருக்கிறார்.

மகளின் வாழ்க்கை என்று தெரிந்ததும் மாணிக் பாட்ஷா போல் அவதாரம் எடுத்து பிரச்சினையை சரி செய்து இருக்கிறார். ஆனால் பிரச்சனைக்கு காரணமாய் இருந்த தனுஷிடம் பேசியிருந்தாலே இதுக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கும். அதை விட்டுட்டு அமலாபாலவை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர் சொன்னபடி இவருடைய கேரியரே தற்போது ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. இதைதான் சொல்வார்கள் பெரிய இடத்து சமாச்சாரம் நமக்கு ஏன் என்று.

Also read: ரஜினி, விஜய்யை விட மிக மிக சொற்ப சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்ஸ்.. மம்மூட்டிக்கு கூட இவ்வளவுதானா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்