ராதிகாவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்.. கோபியின் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் தற்போது ராதிகாவின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. இதுவரை ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் பாக்கியா வீட்டில் கோபியை கூட்டிட்டு வந்து தங்கி இருந்தார். இந்த நேரத்தில் ராதிகாவின் செயல்களை பார்த்து கோபப்படும் கோபியின் அம்மா பொறுமையை இழந்ததால் ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார்.

இதை எதிர்பார்க்காத ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் அவரின் அம்மாவிடம் புலம்புகிறார். அதற்கு அவருடைய அம்மா இதை இப்படியே விட்டால் சரி ஆகாது. நீ கொஞ்சம் பொறுத்திரு நான் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அப்பொழுது வெளியே நின்று கொண்டிருந்த ராதிகாவை பார்த்த கோபி என்ன ஆச்சு ஏன் இப்படி நிக்கிற என்று கேட்கிறார்.

Also read: ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

அதற்கு ராதிகா உங்க அம்மா என்னை வெளியில் அனுப்பிட்டாங்க என்று சொல்கிறார். இதைக் கேட்ட கோபி ராதிகாவை கூப்பிட்டு உள்ளே வந்து அவங்க அம்மாவிடம் நியாயம் கேட்கிறார். அதற்கு கோபியின் அம்மா இனிமேலும் இவ பண்றத என்னால சகிச்சுக்கிட்டு இங்கே இருக்க முடியாது.

ஒன்னு இந்த வீட்டில ராதிகா இருக்கணும், இல்லைன்னா நான் இருக்கணும் நீயே என்ன பண்ணனும் முடிவு பண்ணு என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா போலீசை கூட்டிட்டு வருகிறார். பின்பு போலீசும், சட்டப்படி ராதிகா தான் கோபியின் மனைவி அதனால் அவரை இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு சொல்வதற்கு எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. இனிமேல் இங்குதான் ராதிகா இருப்பார் என்று சொல்லிவிடுகிறார்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

இதன் பின்பு கோபியின் அம்மாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாக்கியா மட்டும் பிடிச்சு வச்ச பொம்மை மாதிரி அப்படியே இருப்பது பார்க்க ரொம்பவே கடுப்பாக இருக்கிறது. அடுத்ததாக இதுவரை தயங்கி கொண்டு அந்த வீட்டில் இருந்த ராதிகா தற்போது போலீஸ் சொன்ன பிறகு அதிக கெத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார். இதன் பிறகு தான் இவருடைய ஆட்டமே ஆரம்பமாக போகிறது.

ஏற்கனவே ஓவரா ஆட்டம் காட்டிட்டு இருந்த ராதிகா இனிமேல் சொல்லவா செய்யணும் கோபியின் அம்மாவையும் சேர்த்து படாத பாடுபடுத்தப் போகிறார். இதற்கெல்லாம் ஒரு தீர்வாக கோபி எடுக்கும் முடிவுதான் இந்த குடும்பத்தை ராதிகாவிடமிருந்து காப்பாற்ற முடியும். அட்லீஸ்ட் கோபி ஆவது ராதிகாவை கூப்பிட்டு வெளியில் போனால் இந்த குடும்பத்தோட நிம்மதியாவது மிச்சமாகும்.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்