படம் ஓடாதுன்னு தெரிந்தே 5 கோடி சம்பளம் வாங்கினாயா.. நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்!

பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படத்தை எந்த அளவிற்கு ப்ரோமோஷன் செய்கிறார்களோ அந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும். இதனால் பிரபல நடிகர், நடிகைகள் பலரும் தாங்கள் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.

தற்போது சினிமாவில் முன்னணியில் இருக்கும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் பலரும் தங்கள் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இதுபோன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வதில்லை.

இந்த கண்டிஷன் உடன் தான் அவர் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதைப்பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் தனது விமர்சனத்தை கூறியுள்ளார். ஒரு பட ஆடியோ விழாவில் பேசிய ராஜன் நயன்தாராவை பற்றி கடுமையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது முன்னணியில் இருக்கும் நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் படத்தின் எந்த ப்ரமோஷனுக்கும் வருவது கிடையாது. இதைப் பற்றி யாராவது கேட்டால் நான் இதுபோன்ற விழாக்களுக்கு சென்று படம் நன்றாக வந்துள்ளது, நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறிவிட்டு பின்னர் அந்த படம் தோல்வி அடைந்தால் அது எனக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நீ நடித்து படம் பெயிலியர் ஆவதற்கு தான் 5 கோடி சம்பளம் வாங்குகிறியா. நடிக்கும்போதே இந்த படம் ஓடாது என்று நினைத்துதான் நடிப்பியா. ஆனால் உங்க தயாரிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் படத்திற்கு மட்டும் புரமோஷனுக்கு வருகிறாய் இது கேவலமாக இல்லையா. அவர்களை சொல்லி குற்றமில்லை இங்கு இருக்கும் தமிழன் சரியில்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவை பற்றி தயாரிப்பாளர் ராஜன் இவ்வளவு கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. இருந்தாலும் அவர் கூறியது சரிதான் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்