ஷங்கர் படத்தில் நடித்தே ஆகணும்.. அடம்பிடிக்கும் பிரபல நடிகரின் தந்தை

ஷங்கர் படத்தில் நடிக்க ஒரு சின்ன வாய்ப்பாவது கிடைத்து விடாதா என பல நடிகர்கள் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரின் தந்தை ஒருவரும் தனக்கு ஏதாவது சின்ன கதாபாத்திரம் கிடைக்குமா என ஏங்கி கொண்டிருக்கிறாராம்.

சங்கர் கடந்த சில வருடங்களாக இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்தியன் 2 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் சங்கருக்கு ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக இந்தியன் 2 படத்தை அப்படியே போட்டுவிட்டு தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவிலும் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். தற்போது இரண்டு படங்களில் பிசியாக இருக்கும் சங்கரை படம் இயக்கக்கூடாது என தடை போடவேண்டும் என்று லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ramcharan-shankar-cinemapettai
ramcharan-shankar-cinemapettai

அதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் ராம்சரண் படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இதில் தனக்கும் ஒரு சின்ன கதாபாத்திரம் கிடைக்குமா என ராம்சரண் தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி சங்கரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

chiranjeevi-cinemapettai
chiranjeevi-cinemapettai

அரசியலில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கும் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் படங்களில் ராம்சரண் சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பார். அதேபோல் மகன் ராம் சரண் நடிக்கும் ஷங்கர் படத்தில் சிரஞ்சீவி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்