அது வேற வாயி நம்புங்கள்.. வாயை விட்டு மாட்டிக் கொண்ட நயன்தாரா

கடந்த வாரம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் திரையரங்கிற்கு சென்று மக்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸ்  என்ன என்பதையும் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர்.

ஆனால் மற்ற படங்களை காட்டிலும் நயன்தாரா, இந்தப் படத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெடுகிறார். பொதுவாக நயன்தாரா ஒரு பதில் சொல்லுவார். நான் நடித்த படத்தின் புரமோஷனுக்கு போனால் அந்தப் படம் சென்டிமென்டாக ஓடாது. அதனால் தான் நான் பட புரமோஷனுக்கு போவதில்லை என்று ஒரு பதில் கூறுவார்.

ஆனால் அது அவர் சொந்த புரொடக்ஷன் படத்திற்கு பொருந்தாது. இவர் சொந்தப் புரோடக்சன் படங்களுக்கு மட்டும் புரோமோஷன் செல்வாராம். இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸ் ஆகியது. அந்தப் பட புரமோஷனுக்காக இவர் எல்லா தியேட்டருக்கு சென்றார். இவர் சென்னையில் 3 முதல் 4 தியேட்டர்களுக்கு போய் அசத்தினார்.

தியேட்டரில் தள்ளுமுள்ளு பெரிய கலவரம் ஆகியது. விக்னேஷ் சிவன் நயன்தாராவை சமாதானப்படுத்தி அவரை காரில் ஏற்றிக் கொண்டு செல்வார். ஒரு கட்டத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவத்துடன் சென்று தரிசனம் செய்து வந்திருக்கிறார்

இப்படி திரையரங்கில் ரசிகர்களை உசுப்பேற்றி விடுவதற்காக வருகின்ற நயன்தாரா, ஏன் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும் நயன்தாரா, அந்தப் படத்திற்கான புரோமோஷனுக்கு செல்வதில்லை. யாருக்காக இருந்தாலுமே சொந்த வீடு சொந்த வீடு தான். அடுத்த வீடு அடுத்த வீடு தான்.

ஆகையால் இதை வைத்து இப்பொழுது ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் படம் புரமோஷனுக்கு வந்தால் படம் ஓடாது என்கிறீர்கள். ஆனால் உங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் ஓடி ஓடி உழைக்கிறீர்கள். இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா! என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்